கனடாவின் நடுவன் அரசுத் தேர்தல்அக்டோபர் 14, 2008 நடைபெற்றது.[1] கனடாவின் நடுவண் பழமைவாத கட்சியின் சிறுபான்மை அரசுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்கிற அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் முடிவாக கனடாவின் நடுவண் பழமைவாத கட்சி மீண்டும் சிறுபான்மை ஆட்சிக்கு வந்தது. அதன் தலைவர் சிரீபன் கார்ப்பர் கனடாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்கட்சியான லிபரல் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து 76 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
தேர்தலில் முக்கிய விடயமாக சூழலியல் இருக்கும் என்று சிலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகப் பெருளாதார நெருக்கடியும் அதனால் கனடாவுக்கு ஏற்படும் விளைவுகளும் முக்கிய பிரச்சினையாக எழுந்தது. குறிப்பாக வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி துறை கவனம் பெற்றது.