கிமு 3 - கிபி 12 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்கிமு 3 - கிபி 12 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் என்பது சங்க காலம் தொடக்கம், தற்போது விரிவான இலக்கியச் சான்றுகள் கிடைக்கும் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சார்ந்த ஈழத்து தமிழ் இலக்கியம் ஆகும். ஈழத்து இலக்கிய பாகுபாட்டில் இக் காலத்தின் தொடக்கப் பகுதியை சங்ககாலம் அல்லது மகாவம்ச அரசர் காலம் என்பர். இக்காலப்பகுதியைச் சார்ந்த முழுமையான இலக்கியப் படைப்புக்கள் கிடைப்பெறவில்லை. பிற தமிழ்/சிங்கள இலக்கியங்களில் இடம்பெறும் குறிப்புகள், பதிகங்கள், பாடல்கள், சிங்கள/பாளி இலக்கியங்களில் இடம்பெறும் தமிழ் மொழியின் தாக்கங்கள், வாய்மொழி/நாட்டார் இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் சாசனங்களைக் கொண்டு ஆய்வாளர்கள் மீட்டுருவாக்க முயற்சிகளைச் செய்துள்ளார்கள்.[1] விரிவான சிங்கள இலக்கிய சான்றுகள் கிபி 12 நூற்றாண்டிலேயே கிடைக்கத் தொடங்குகின்றது. இந்தக் காலத்துக்கு முந்திய படைப்புக்கள் அந்நியர் படைப்யெடுப்புக்களினால் அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதே போன்ற காரணங்களால் தமிழ் இலக்கியங்களும் அழிந்திருக்கலாம் என்று ஆ. வேலுப்பிள்ளை தனது ஆய்வில் சுட்டுகிறார்.[1] கால வகைப்பாடு
சான்றுகள்கிபி 12 ஆம் நூற்றாண்டு - பதவியா கல்வெட்டுச் செய்யுள் [1]உத்தமர்தங் கோயில் வலகழி எனலும் கிபி 9/10 ஆம் நூற்றாண்டு - நாலுநாட்டார் கல்வெட்டு - அனுராதபுரச் செய்யுள் [2]போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந் கிபி 7 ஆம் நூற்றாண்டு - சம்பந்தரின் திருக்கேதீச்சரம் பதிகம்தென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள் இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia