கிரென்ஃபெல் கட்டிடத் தீ
இலண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் கட்டிடத்தில் பிரிட்டன் கோடைகால நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் கொல்லப்பட்டனர். தீ விபத்துஇருபத்தி நான்கு மாடிகளைக் கொண்ட மக்கள் குடியிருப்பிற்கான கட்டிடம் தீப்பிடித்தது. தீயை கட்டுக்குள் கொண்டுவர 250 தீயணைப்பு வீரர்களும் 45 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இவ்விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். 77 -க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 20 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிட்சை பெறுகின்றனர். காரணம்![]() தீ விபத்திற்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.[3] பழுதடைந்த உபகரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்தன. நான்காவது மாடியில் குடியிருந்த ஒருவர், அவரின் அருகாமை வீட்டின் குளிர்பதனப் பெட்டி அதிகாலை ஒரு மணியளில் தீப்பிடித்ததாகவும் அதுவே இவ்விபத்திற்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia