கிள்ளிக்குருச்சிமங்கலம்

கிள்ளிக்குருச்சிமங்கலம்
சிற்றூர்
கிள்ளிக்குருச்சிமங்கலம்- சிவன் கோயில்
கிள்ளிக்குருச்சிமங்கலம்- சிவன் கோயில்
ஆள்கூறுகள்: 10°45′58″N 76°26′10″E / 10.766°N 76.436°E / 10.766; 76.436
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

கிள்ளிக்குருச்சிமங்கலம் (லக்கிடி என்றும் அழைக்கப்படுகிறது) (Killikkurussimangalam) (also known as Lakkidi) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் என்ற நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரின் தெற்கு எல்லையாக நிலா ( பாரதப்புழா ) ஆறு பாய்கிறது.

சொற்பிறப்பியல்

இக்கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலான கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயிலால் இந்த கிராமத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இக்கோயில் மிகவும் பழமையானது, இது ஸ்ரீ சுக பிரம்ம ஹ்ரிஷி முனிவரால் நிறுவப்பட்டதாக தொன்மங்கள் கூறுகின்றன.

குஞ்சன் நம்பியார் பிறந்த ஊர்

இந்த சிற்றூரானது பிரபல மலையாள நையாண்டிக் கவிஞரும் ஓட்டன் துள்ளல் கலை வடிவத்தின் நிறுவனருமான குஞ்சன் நம்பியார் (ராம பனிவடா) பிறந்த இடமாகும். குஞ்சன் நம்பியார் பிறந்த இல்லமான, களக்காத்து பவனம், இப்போது கேரள மாநில அரசின் பண்பாட்டுத் துறையால் பண்பாட்டு மையமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குஞ்சன் நம்பியாரின் நினைவாக குஞ்சன் ஸ்மாரக வயனாசாலா - குஞ்சன் நினைவு நூலகம் என்ற நூலகமும் உள்ளது.

கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞரும், நாட்டியசாத்திர அறிஞருமான நாட்யாச்சார்யா விதூஷகரத்னம் பத்மசிறீ குரு மணி மாதவ சாக்யாரும் அபிநய (நடிப்பு) அதிகாரியாக இருந்தவர். கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயிலுக்கு அருகில் இவரது வீடு உள்ளது. சாக்கியரின் முக்கிய சீடர்களில் ஒருவரான குரு கேலு நாயரின் சொந்த ஊரும் இதுவாகும்.

சமசுகிருத அறிஞர் கொப்பத்து அச்சுத பொதுவாளும் கோயிலுக்கு அருகில் வசித்து வந்தார்.

சாக்யார் நடனம்

கல்வி

ஸ்ரீ சங்கரா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி, முன்பு பாலகொல்லாசினி சம்ஸ்கிருத பாடசாலை என்று அழைக்கப்பட்டது. இது இந்தப் பகுதியில் உள்ள பழமையான உயர்நிலைப் பள்ளியாகும். இது ஏழைகளின் கல்விக்காகு உதவுவதாக உள்ளது. சிறந்த சமஸ்கிருத அறிஞரும் ஆசிரியருமான பண்டிதரத்தினம் பழேடத்து சங்கரன் நம்பூதிரிபாட் அவர்களால் தொடங்கப்பட்டது. கேரளத்தில் சமசுகிருதம் முக்கிய மொழியாக கற்பிக்கப்படும் ஆறு பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஸ்ரீ கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயிலுக்கு அருகில் புனிதமான கோயில்- குளம் ( அம்பலக்குளம் ) உள்ளது, அங்கு பக்தர்கள் நீராடுகின்றனர்.

படக்காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya