கீழ்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
கீழ்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும்.[1] மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காசு செட்டியார் என்பவர் இக்கோவிலை புரணமைத்து கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்ததாக சொல்லப்படுகிறது. குடமுழுக்குபராமரிப்பு இன்றி இடிந்தநிலையில் இருந்த இந்த கோயில் சிவனேய அன்பர்கள் இணைந்து திருப்பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் சார்பிலும் திருகோவிலில் திருப்பணிகள் செய்துதரப்பட்டது. பின்னர் இத்திருக்கோவிலுக்கு குடமுழுக்குவிழா 30 அக்டோபர் 2014 அன்று நடைபெற்றது. வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் ஆருள்மிகு மீனாட்சி சுந்தரேசர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு,[3] ராகு கால பூஜை, பைரவர் அஷ்டமி வழிபாடு, நவக்கிரக பூஜை, அன்னாபிஷேகம், திரு விளக்கு பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia