சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம், 2018

சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம், 2018, கொலை, கொள்ளை, வன்முறைகள், பெரும் ஊழல், நிதி மோசடி, போதைப் பொருள் கடத்தல் போன்ற கொடிய வழக்குகளில் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்திட்டம் 2018ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.[1] [2] இத்திட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குற்ற வழக்குகளில் சாட்சிகளின் உயிருக்கு பிரதிவாதிகளால் (குற்றம் சாட்டப்பட்டவர்களால்) ஆபத்து நேரிடும் என சாட்சிகள் கருதும் பட்சத்தில், சாட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க நீதிமன்றம் சாட்சிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க ஆணையிடும்.

உள்ளடக்கம்

  • சாட்சி அல்லது சாட்சிகள் என்பது ஒரு நீதித்துறை தீர்ப்பாயத்தில் சாட்சியங்களை வழங்குபவர் அல்லது வாக்குமூலம் அளிப்பவர்.
  • குற்றவியல் நீதி அமைப்பு சீராக செயல்பட சாட்சிகள் மிக முக்கியமானவர்கள். மேலும் அவர்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் சாட்சியம் சொல்ல வேண்டும்.
  • "சாட்சி" என்ற சொல் 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அல்லது பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பில் குறிப்பாக வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் ஒரு வழக்கைத் தீர்ப்பதற்கு குறிப்பிட்ட நபர்களின் சாட்சியம் அவசியமானால் நீதிமன்றங்கள் யாரையும் சாட்சியாக அழைக்கலாம்.

சாட்சி பாதுகாப்புத் திட்டம், 2018

அச்சுறுத்தல்களை வகைப்படுத்துதல்: இந்தத் திட்டம் சாட்சிகளை அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் அடிப்படையில் மூன்று வகைகளாக வகைப்படுத்துகிறது: வகை அ: விசாரணையின் போதும் அதற்குப் பின்னரும் சாட்சி அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நீட்டிக்கப்படும்.. வகை ஆ: அச்சுறுத்தல் என்பது சாட்சியங்களின் பாதுகாப்பு, நற்பெயர் அல்லது சொத்துடன் தொடர்புடையது. வகை இ: மிதமான அச்சுறுத்தல், பெரும்பாலும் துன்புறுத்தல் அல்லது மிரட்டலை உள்ளடக்கியது.

  • இரகசியத்தன்மை: சாட்சிகளின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. நீதிமன்ற அறையில் நேரடியாக ஆஜர் ஆவதை தடுக்க வீடியோ கான்பரன்சிங் அல்லது பிற வழிகளில் சாட்சியமளிக்க அனுமதிக்கும் நடைமுறைகள் உள்ளது.
  • சாட்சி பாதுகாப்பு நிதி: இந்தத் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க சாட்சி பாதுகாப்பு நிதி நிறுவப்பட்டுள்ளது. சாட்சி பாதுகாப்பு நிதிக்கு மாநில அரசின் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்களால் விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் கொடையாளர்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் நன்கொடைகள் அல்லது பங்களிப்புகள் மூலம் சாட்சி பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்கப்படுகிறது.

சாட்சிகளின் பாதுகாப்பு வகைகள்

  • நீதிமன்றத்தில் சாட்சியின் அடையாளத்தை மறைத்தல்.
  • சாட்சியின் வீட்டின் வெளிப்புறங்களில் சிசிடிவி போன்ற பாதுகாப்பு சாதனங்களை நிறுவுதல்.
  • சாட்சிகள் நீதிமன்றத்திற்குச் சென்று வருவதற்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்குதல்.

செயல்படுத்தும் முறை

இந்தத் திட்டம் ஒவ்வொரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியின் கீழ் உருவாக்கப்பட்ட "சாட்சி பாதுகாப்புப் பிரிவு" மூலம் மாநில அளவில் செயல்படுத்தப்படுகிறது. சாட்சிகளின் பாதுகாப்புக்கான விண்ணப்பங்கள் மாவட்டத் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் சாட்சிகளின் மீதான அச்சுறுத்தலின் அளவைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் செயல்படுத்தலை மறுஆய்வு செய்யும் அதிகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது. இது மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இந்திய நாடாளுமன்றம் முறையான சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றும் வரை இத்திட்டம் ஒரு சட்டமாகச் செயல்படுகிறது.

திட்டத்தின் முக்கியத்துவம்

சக்திவாய்ந்த நபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான வழக்குகளில் குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருக்கும் சாட்சிகளை மிரட்டலைக் குறைக்க இந்தத் திட்டம் முயல்கிறது.

சாட்சிகள் அச்சமின்றி நீதிமன்றத்தில் முன்வந்து சாட்சியம் அல்லது வாக்குமூலம் வழங்குவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும், இது உயர்மட்ட குற்ற வழக்குகளில் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

வரம்புகள்

சில மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மெத்தனமாக உள்ளது. மேலும் சாட்சி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் பெரும்பாலும் போதுமானதாக இல்லை.

கீழ் நீதிமன்றங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் அறியாமை காரணமாக சாட்சி பாதுகாப்பு திட்டம் ஒரு சவாலாகவே உள்ளது.

சாட்சி பாதுகாப்புத் திட்டத்தின் முக்கிய கவலைகள்

  • பல மாநிலங்கள் இந்தத் திட்டத்திற்கு போதுமான நிதி மற்றும் உள்கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை.
  • அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதில் காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது.
  • சாட்சிகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க, அனைத்து மாநிலங்களும் சாட்சி பாதுகாப்புத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதை உறுதி செய்வதே உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் நோக்கமாகும், ஏனெனில் சாட்சிகள் இல்லாமல் நீதி திறம்பட வழங்கப்படாது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya