சார்லஸ் ஆல்ஃபிரட் பார்பர்![]() சார்லஸ் ஆல்ஃபிரட் பார்பர் ( Charles Alfred Barber ) (10 நவம்பர் 1860 - 23 பிப்ரவரி 1933) ஒரு பிரித்தானியத் தாவரவியலாளரும் மற்றும் கரும்பு பற்றிய நிபுணரும் ஆவார். இவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதி தென்னிந்தியாவில் பணியாற்றினார். வட இந்தியாவில் காடுகளில் வளரும் கரும்பு இனமான ஒரு கரும்பு ( சாச்சரம் பார்பெரி ) இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. காட்டு மற்றும் கடினமான உள்ளூர் இனங்களுக்கு இடையே கலப்பினங்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியாவில் காட்டு கரும்புகளை தரம் உயர்த்துவதில் இவர் ஒரு முன்னோடியாக இருந்தார். மேலும், வட இந்தியாவின் குளிர்காலத்தில் உயிர்வாழக்கூடிய அதிக சர்க்கரை விளைவிக்கக்கூடிய செங்கரும்பை சாகுபடி செய்தார். கல்வி1860 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் ரெவ். வில்லியம் பார்பரின் மகனாகப் பிறந்தார். நியூ கிங்ஸ்வுட், பாத் மற்றும் பின்னர் பான் பல்கலைக்கழகத்தில் (1883-84) படிக்கச் சென்றார். பான் பல்கலைக்கழகத்தில், இவர் தாவரவியலாளர் எட்வார்ட் ஸ்ட்ராஸ்பர்கர் என்பவரின் கீழ் படித்தார். பின்னர், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 1887 (பகுதி I) மற்றும் 188 (பாகம் II) இல் இயற்கை அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1892 இல் முதுகலை மற்றும் முது அறிவியல் பட்டம் பெற்றார். 1908 இல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1892 இல் லீவர்ட் தீவுகளில் தாவரவியல் நிலையத்தின் கண்காணிப்பாளராகச் சேர்ந்தார். கூப்பர்ஸ் ஹில்லில் உள்ள அரச கழக பொறியியல் கல்லூரியில் தாவரவியலில் விரிவுரையாளராக சேருவதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 1898 இல் இவர் சென்னை மாகாணத்தில் அரசாங்க தாவரவியலாளராக சேர்ந்தார். 1906-1908 வரை தாவரங்களில் வேர்-ஒட்டுண்ணித்தன்மையைப் படித்தார். 1912 இல் அரசாங்கத்தின் கரும்பு நிபுணரானார். 1919 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் வெப்பமண்டல விவசாயம் பற்றிய விரிவுரையாளரானார். 1918 இல் பிரித்தானிய இந்தியப் பேரரசின் மிக உயர்ந்த துணைவர் ஆனார்.[1] [2] [3] தொழில்சார்லஸ் ஆல்ஃபிரட் பார்பர் கரும்பு இனப்பெருக்கம் மற்றும் அடிப்படை தாவரவியலில் பல அம்சங்களில் பணியாற்றினார். கோயம்புத்தூரில் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் என அழைக்கப்படும் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவினார். மேலும், தி. சா. வெங்கட்ராமனுடன் இணைந்து இந்தியாவிற்கு ஏற்ற கலப்பின கரும்பு வகைகளை உருவாக்கினார். இவற்றில் இந்தியாவின் உள்ளூர் மற்றும் கடினமான கரும்புகளுக்கு இடையேயான கலப்பினங்கள் அடங்கும், அவை இப்போது இவரது பெயரால் சாச்சரம் பார்பெரி என்று அழைக்கப்படுகின்றன. [4] [5] இவருக்கு 1931 இல் மேனார்ட்-கங்கா ராம் பரிசு வழங்கப்பட்டது. இறப்புசார்லஸ் ஆல்ஃபிரட் பார்பர் 23 பிப்ரவரி 1933 அன்று கேம்பிரிட்சில் இறந்தார்.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia