சார்லஸ் டார்வின் அறக்கட்டளைசார்லசு டார்வின் அறக்கட்டளை (Charles Darwin Foundation) என்பது 1959ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் ஆகிய அமைப்பின் முயற்சியின்கீழ் நிறுவப்பட்டது. சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி மையம் இந்த அறக்கட்டளையின் தலைமையகமாக செயல்படுகிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவிக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. சார்லஸ் டார்வின் அறக்கட்டளை எக்குவோடரில், கலாபகோசு, சாண்டா குரூசு தீவு, புவேர்ட்டோ அயோராவில் அமைந்துள்ளது.[1] சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையம்சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையம் சார்லஸ் டார்வின் அறக்கட்டளையால் இயக்கப்படும் ஓர் உயிரியல் ஆராய்ச்சி நிலையமாகும். இவ்வாராய்ச்சி நிலையம் கலிபகோஸ் தீவுகளில் உள்ள பியூர்டோ அயோரா கிராமத்தில் அகாடமி விரிகுடாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1959 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1964 ஆம் ஆண்டு நாட்டுக்காக அர்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் ஆகும். இயற்கை வரலாற்றினை விளக்குவதற்காகவும், கலாபகோஸ் தீவுகளின் பாதுகாப்பு கல்விக்காகவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நோக்கங்கள்
படங்கள்
மேற்கோள்
வெளிபுற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia