சித்திரமேழி பெரியநாட்டார்சித்திரமேழி பெரியநாட்டார் (Chittiramezhi Periyanattar) என்பது சோழர் காலத்தில் (கி.பி. 11-13ஆம் நூற்றாண்டு) தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பாகும். இவர்கள் வேளாண்மை மற்றும் வணிகத் துறைகளில் முக்கிய பங்கு வகித்த ஒரு சமூக-அரசியல் குழுவாகும்.[1] இவர்கள் குறித்து பல கல்வெட்டுகள், சமூக ஆய்வுகள் மற்றும் நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2][3][4] சொற்பிறப்புசித்திரமேழி:"சித்திரம்" (அழகிய) + "மேழி" (உழவுக்கலப்பை) என்பதன் சேர்ப்பாகும். இது வேளாண்மையின் அடையாளமாக அலங்கரிக்கப்பட்ட கலப்பைச் (The Magnificent Plough) சின்னத்தைக் குறிக்கிறது பெரியநாட்டார்: "பெரிய நாடு" (பரந்த பிரதேசம்) அல்லது "பெரிய மன்றம்" எனப் பொருள்படும். இது இவர்களின் பரந்த அமைப்பு மற்றும் அதிகாரத்தை விளக்குகிறது. வரலாறுசித்திரமேழி பெரியநாட்டாரின் தோற்றம்கி.பி. 1057-ல் தொண்டை மண்டலத்தின் தாமரைப்பாக்கம் கல்வெட்டு சான்றளிக்கும் வகையில், சித்திரமேழி பெரியநாட்டார் என்ற கூட்டமைப்பு உருவானது. இவர்கள் வேளாளர் மற்றும் வணிகர்கள் (ஐந்நூற்றுவர்) ஆகியோரின் கூட்டணியாக இருந்தனர். [5]இக்கூட்டமைப்பு, பிராமணர்களுக்கு மன்னர்களால் வழங்கப்பட்ட "பிரம்மதேயம்" (நிலக்கொடைகள்) மற்றும் "சதுர்வேதி மங்கலம்" (கிராமங்கள்) போன்ற அதிகாரங்களை எதிர்த்துப் போராடியது. இந்த நிலக்கொடைகள் கிராமங்களின் விளைநிலங்களை பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றதால், வேளாளர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கியது.[6][7] பிராமணிய எதிர்ப்பு மற்றும் சமூகப் புரட்சிநில உரிமை மீட்புசித்திரமேழி பெரியநாட்டார், பிராமணர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட நிலங்களை மீட்டனர். பிரான்மலை மற்றும் திருமலை கல்வெட்டுகள் இவர்கள் நிலங்களை மீளக்கொண்டதற்கான ஆதாரங்களை வழங்குகின்றன.[5] கோயில் கட்டுப்பாட்டு போராட்டம்தெய்வீக சமத்துவம்: பெருமாள் கோயில்களைக் கைப்பற்றி, பூமாதேவி போன்ற பெண் தெய்வங்களுக்கு ஆண் தெய்வங்களுக்கு சமமான சன்னிதிகள் அமைத்தனர். எடுத்துக்காட்டாக, மதுரையில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், சொக்கநாதர் கோயிலுடன் இணைக்கப்பட்டது பெயர் மாற்றம்: கோயில்களுக்கு தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டினர் (எ.கா., "கரியமாணிக்கப் பெருமாள்" → "சித்திரமேழி விண்ணகர எம்பெருமான்") [8][9] பொருளாதாரத் தன்னாட்சிவரி மற்றும் விலை நிர்ணயம்: அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் வரி விகிதங்கள் மற்றும் பொருட்களின் விலைகளை (MRP) தங்களாகவே நிர்ணயித்தனர். இது திருமலை கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது வணிகர்களின் பங்கு: வணிகர்கள் தங்கள் பயணங்களில் திருடர்களிடமிருந்து பாதுகாப்புக்காக தனிப் படைகளை வைத்திருந்தனர். இவர்களும் பிரம்மதேய கொடுமைகளால் பாதிக்கப்பட்டதால், வேளாளர்களுடன் இணைந்தனர் விஜயநகர காலத்தில் மாற்றங்கள்விஜயநகரப் பேரரசின் காலத்தில் (கி.பி. 14-16ம் நூ.), சோழர் காலத்தில் வேளாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட சித்திரமேழி பெரியநாட்டார் (நில உரிமையாளர்கள்) அமைப்பு, வணிகர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கியதாக மாறியது. இக்காலத்தில் ஊர் (கிராம சபை) மற்றும் நாடு (பிராந்திய அமைப்பு) போன்ற பாரம்பரிய நிர்வாக அமைப்புகள், மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறை மற்றும் வணிகப் பெருக்கத்தால் தங்கள் செல்வாக்கை இழந்தன. வரலாற்றாய்வாளர்களான நோபோரு கரஷிமா, டி.வி. மகாலிங்கம் ஆகியோர் இந்த மாற்றத்தை ஆவணப்படுத்தியுள்ளனர்.[10] வீழ்ச்சி மற்றும் தாக்கம்14ஆம் நூற்றாண்டு: பிரம்மதேய நிலக்கொடைகள் குறைந்ததால், சித்திரமேழி பெரியநாட்டார் மெதுவாக மறைந்தனர். தமிழ்ச் சமூகத்தில் தாக்கம்கோயில்களில் பெண் தெய்வங்களின் நிலை உயர்த்தப்பட்டது (கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்) இந்த சித்திர மேழி எனப்படும் வேளாளர் குழு, 14ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பல்லவ, பாண்டிய, சோழ, தொண்டை மற்றும் கொங்கு நாடுகள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக செயல்பட்டிருந்தது. கல்வெட்டுச் சான்றுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia