சிறுமுகை வெங்கடேஸ்வரசுவாமி வாரி கோயில்

சிறுமுகை வெங்கடேஸ்வரசுவாமி வாரி கோயில் என்பது தமிழ்நாட்டில், கோவை மாவட்டம், சிறுமுகையில் அமைந்துள்ள வைணவத் தலமாகும்.[1] இக்கோயிலை தென்திருப்பதி என்று அழைக்கின்றனர். இக்கோயில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் ஒரு இயற்கை மலை மீது அமைந்துள்ளது.

தனியார் கோயில்

இக்கோயில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கண்ணபிரான் மில்ஸ் (கே ஜி மில்ஸ்) என்ற நிறுவனத்தினரால் மக்களின் பங்களிப்பு ஏதுமின்றி தனிப்பட்ட முறையில் கட்டப்பட்டதாகும்.

கோயில் பராமரிப்பு, பூஜைகள், அன்னதானம் அனைத்தும் இந்நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது. கோயிலின் அமைப்பு மற்றும் பூஜை முறைகள் திருப்பதியை ஒத்திருக்கின்றன.

கோயில் அமைப்பு

கருடாழ்வார் இறைவனை பார்த்து அமர்ந்திருக்கிறார். வரதராஜஸ்வாமி கோயில் பிரதான கோயிலின் தென்கிழக்கு மூலையில் உள்ளது. சுதர்ஷன அஷ்வர், யோக நரசிம்மர், நான்கு வைஷ்ணவ பக்தர்கள், ராமானுஜர், நமஜேஷ்வர், திருமங்கை அஸ்வர் மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆகியோரின் தனி சன்னதியில் உள்ளனர்.

45 அடி உயரத்தில் துவாஜஸ்தம்பம் கொண்ட பிரதான கோயிலுக்கு அடைய 33 படிகள் உள்ளன. ஒரு சிறிய தாமரை புஷ்கர்ணி கட்டப்பட்டுள்ளது. [2] [3]

விழாக்கள்

  • பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கொடியேற்றம், மலையப்ப சுவாமியின் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.
  • சிறீ வாரி சுவாமிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சமர்ப்பிக்கும் நிகழ்வு
  • மலையப்ப சுவாமியின் மோகினி திருக்கோல உற்சவம் நடைபெற்றது.
  • திருத்தேர் உற்சவம்.

ஆதாரங்கள்

  1. https://www.dailythanthi.com/News/State/navratri-festival-at-thirumalai-temple-in-south-thirupati-802435
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-18. Retrieved 2017-07-17.
  3. https://www.ixigo.com › ... › places to visit › religious › temple › then-thirumalai
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya