சிலப்பதிகார நாடகவியல்ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தொடர்நிலைச் செய்யுள் என அழைக்கப்படுகிறது. இக்காப்பியத்தில் முத்தமிழின் வேரான இயல், இசை ,நாடகம், என்னும் மூன்றினயும் காணலாம். சிலப்பதிகாரத்தில் நாடகக் காப்பியத்திற்கு இன்றியமையாத உறுப்புகள் எல்லாமும் நிறைந்திருக்கின்றன எனக் கூறப்படுகிறது. எனவே இதனை 'நாடகக் காப்பியம்' என்று கூறுவர். இந்நூலில் இன்பியல், துன்பியல் நாடகக் கூறுகள் காட்டப்படுகின்றன. பழங்கால நாடகப் பான்மையை அறிய மிகவும் துணை செய்வது இந்நூலாகும். நாடகக் காப்பியம்இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகளை வரலாற்றாசிரியர் போல வரிசையாகக் கூறாமல் இடத்திற்கும் பாத்திரத்திற்கும் ஏற்றார்போல் அங்காங்கு மாற்றியமைத்துக் கூறுவதும், வழக்குரைக் காதையில் அமைந்துள்ள உரையாடல் போன்ற பகுதிகளும் இதனை ஒரு சிறந்த நாடகக் காப்பியம் எனக் கூறும்படி அமைந்துள்ளது. கானல்வரி இளங்கோவடிகளின் இசை மற்றும் நாடகப் புலமைக்குச் சான்றாகும். நாடகக் கூறுகள்கண்ணகியின் பிரிவு, அவள் தன் தீயகனவு, கோவலன் கண்ட அஞ்சுவரு கணவு, அவ்விருவரும் காட்டுவழி செலவு, நீதிக்கு முரணான கோவலன் கொலை, தேற்ற முடியாத கண்ணகியின் துயர், கோல்கோடிய பாண்டியனின் இறுதி, கண்ணகி தனது இடது நிகிலைத் திருகியெறிந்து மதுரையை எரித்தது, கோப்பெருந்தேவியும் பாண்டியனோடு விண்ணகம் புக்கது போன்றவை இக்காப்பியத்துள் காணும் துன்பியல் கூறுகள் ஆகும். புகார் காண்டம் முழுதும் ஆங்காங்கே இன்பமே விரவியுள்ளன. துயருழந்தார் இருவரும் தேவர் புடை சூழ வானவூர்தியில் ஊர்ந்து துறக்கம் சென்றனர் என கதையின் முடிவு இன்பந்தருவதாய் அமைந்துள்ளது. நாடக உத்திகள்மேலை நாட்டு நாடக உத்தியான ' நாடக அங்கதம்' துன்பியல் நாடகங்களுக்கு இன்றியமையாததாகும். துன்பியல் நாடகமான சிலம்பிலும் இந்நாடக அங்கதம் இடம் பெற்றிருக்கிறது. முரண்சுவை உத்திகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia