சுல்பிக்கார் அலி பூட்டோ
சுல்பிக்கார் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto, உருது:ذوالفقار علی بھٹو, சிந்தி: ذوالفقار علي ڀُٽو,ஜனவரி 5, 1928 – ஏப்ரல் 4, 1979) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். இவர் பாகிஸ்தானின் அதிபராக 1971 முதல் 1973 வரையிலும் அதன் பிரதமராக 1973 முதல் 1977 வரையிலும் பணியாற்றினார். இவர் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை நிறுவியவர் ஆவார். இவரது மகள் பெனாசிர் பூட்டோ இரு முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்து டிசம்பர் 27, 2007 இல் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். சுல்பிக்கார் அலி பூட்டோ தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஐக்கிய இராச்சியத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி கற்றவர். இவர் 1979-இல் தனது அரசியல் எதிரியைக் கொலை செய்யத் தூண்டியமைக்காக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்[2][3]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia