செட்டிகுளம், திருநெல்வேலி மாவட்டம்
கன்னியாகுமரியைச் திருச்செந்தூருடன் இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில்,கன்னியாகுமரியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செட்டிகுளம். அருகில் உள்ள நகரம் நாகர்கோவில் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்காக செட்டிகுளம் அருகே அனுவிஜய் டவுன்ஷிப் அமைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் கடற்கரை தான் நெல்லை மாவட்டத்தின் மீக நீழமான கடற்கரை. இதன் தூரம் சுமார் 3கி.மீ.ஆகும். ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. திருவிழா நாட்களில் மற்றும் பண்டிகை நாட்களில் கடற்கரையில் கூட்டம் அலைமோதும். மற்ற நாட்களில் ஊர் மக்கள் தினமும் குளித்து மகிழ்வர். செட்டிகுளம் கடற்கரையிலிருந்து பார்த்தால் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை அழகாக தெரியும். இந்த கடற்கரையில் இரவில் அதிகமாக நண்டுகள் வரும். காலை மாலை நேரத்தில் செட்டிகுளம் மக்கள் தியானம், விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றை தினமும் செட்டிகுளம் கடற்கரையில் மேற்கொள்கிறார்கள். செட்டிகுளம் பண்ணையூர் என்றால் பல மக்களுக்கு தெரியும்.
|
Portal di Ensiklopedia Dunia