செப்டம்பர் 2015 சந்திர கிரகணம்
செப்டம்பர் 2015 நிலவு மறைப்பு என்பது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 27ஆம் 28ஆம் திகதிகளில் நடைபெற்ற நிலவு மறைப்பு ஆகும். இது வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் செப்டம்பர் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வானில் தென்பட்டது. ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும்மத்திய கிழக்கு நாடுகளில் செப்டம்பர் 28 ஆம் நாள் அதிகாலை தென்பட்டது. 2014-2015 காலத்தின் நிலவு மறைப்பு நாற்தொடர்களில் இந்த நிலவு மறைப்பே இறுதியானது ஆகும். புவியிலிருந்து நெருக்கமான அணுக்கத்திற்கு மிக அருகில் இருந்தமையால், இக்கிரகணத்தின் மத்தியில் நிலவானது இயல்பான அளவைவிடப் பெரியதாகக் காணப்பட்டது. இது பெருமுழுநிலவு என அழைக்கப்படுகிறது. வடகிழக்கு பிரேசிலின் கரைக்குச் சற்றே அப்பால், தலைக்கு நேர்மேலாகக் காணப்பட்ட நிலவின் கோண விட்டம் 34' ஐவிடப் பெரியதாக இருந்தது.[1][2] ![]() புலப்படுதன்மைஇந்த நிலவு மறைப்பு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும்மத்திய கிழக்கு நாடுகளில் புலப்பட்டது.
|
Portal di Ensiklopedia Dunia