செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்
செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory, MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். இத்தரையுலாவி விண்கலம் 2011 நவம்பர் 26 ஆம் நாள் 10:02 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ்-5 என்ற ஏவுகலம் மூலம் ஏவப்பட்டது[2][3]. இத்திட்டத்தின் "கியூரியோசிட்டி" (Curiosity) எனப் பெயரிடப்பட்ட தரையுலாவி[12][13] செவ்வாயில் கேல் பள்ளம் என்ற பகுதியில் 2012 ஆகத்து 6 ஆம் நாள் ஒசநே 05:14:39 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது.[2][3] [14][15] கேல் பள்ளத்தின் உள்ளே 5 கி.மீ. உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன[16]. திட்டத்தின் குறிக்கோள்கள்
கியூரியோசிட்டி தரையுலாவிகியூரியோசிட்டி தரையுலாவி (Curisoity) உலகிலேயே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய தரை ஊர்தி (Rover) ஆகும். இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia