சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 19. இது, தமிழ்நாட்டின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு வரையில் சிறிய தொகுதியாக இருந்து வந்த சேப்பாக்கம் தொகுதி, 2011-ம் ஆண்டு முதல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி, சேப்பாக்கம் தொகுதியுடன் இணைக்கப்பட்ட பிறகு பெரிய தொகுதிகளில் ஒன்றாக இந்த தொகுதியும் உள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் பன்னாட்டு துடுப்பாட்ட விளையாட்டரங்கம், எழிலகம் அரசு கட்டிடம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம், பெரிய மசூதி ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன. இசுலாமியச் சிறுபான்மையினர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் மையப் பகுதியில் எழும்பூர், சென்ட்ரல் தொடருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.[1] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 2,34,319. அதில் ஆண் வாக்காளர்கள்: 1,15,080 பெண் வாக்காளர்கள்: 1,19,204 மற்றும் மூன்றாம் பாலினம்: 35 ஆவர். திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கசாலி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு. ஜெயசிம்மராஜாவும், அமுக சார்பில் எல். இராஜேந்திரன் போட்டியிட்டனர்.[2] தொகுதியில் அடங்கும் பகுதிகள்சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111[3]. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia