சோழர் கால அடிமை முறை
கி.பி.11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழநாட்டில் அடிமைகள் விற்கப்பட்ட செய்தி பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. [சான்று தேவை] அடிமை மனிதர்கள் அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப விலைக் கூவி விற்கப்பட்டுள்ளனர். [சான்று தேவை] அடிமைகளில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். வேளான் மகன், கல்தச்சன், தேவரடியார், இடைக்குடி மக்கள், நெல், குத்தும் பெண்கள், நந்தவனக் குடிகள், பறைக் கொட்டும் உவச்சர் ஆகியோர் அடிமைகளாக இருந்துள்ளனர்.[சான்று தேவை] அடிமைகளாக ஆக்கப்பட்ட மக்களின் வகை
இவ்வாறு பதினைந்து காரணங்களால் மக்கள் அடிமையாக்கப்பட்டனர்.[சான்று தேவை] சமுதாயத்தில் இழிவானதாக கருதப்படும் பணிகளை இம்மக்களைக் கொண்டு செய்தனர். இவர்களை தாசர், தாசன், தாசி என்று மனு குறிப்பிடுகின்றது. [சான்று தேவை] அடிமைகளின் பரிமாற்றம்ஒன்று தன்னை தானே விற்றுக்கொள்ளுதல், இரண்டு தன் மனைவி மக்களையும் விற்றுக்கொள்ளுதல், மூன்று இனிவரும் சந்ததிகளையும் சேர்த்து அடிமையாக்குவதாக எழுதிக் கொடுத்து விற்றுக்கொள்ளுதல், ஒருவர் தம்முடைய அடிமைகளை தனிப்பட்ட ஒருவருக்கோ, கோயிலுக்கோ, மடத்திற்கோ விட்டுவிடுதல் அல்லது தானமாக அளித்தல் என்று பல வகைகளில் அடிமைகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. [சான்று தேவை] அடிமைகளின் விற்பனைகி.பி.1201-ல் பஞ்சம் ஏற்பட்டபோது வாழ வழியின்றி வெள்ளாளன் ஒருவன் தன்னையும், தன் மனைவியையும். துன் மக்களையும் 110 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளான். [சான்று தேவை] கி.பி.1219-ல் 5 பெண்களும், 5 ஆண்களும் வழிவழி அடிமையாக 1000 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளனர். [சான்று தேவை] கி.பி.1210-ல் வெள்ளாளன் ஒருவரும் அவன் மனைவியும் 110 காசுகளுக்கு மடத்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். அந்தணன் ஒருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உட்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றொரு முறையும் விற்றுள்ளான். அத்துடன் 2 பெண்களும், 5 ஆண்களும் 30 காசுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்ட செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.[சான்று தேவை] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia