ஜியோவானி மெல்கியோர் கலோசோஜியோவானி மெல்கியோர் கலோசோ (1759 - 21 நவம்பர் 1830) ஓர் இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார் ஆவார். தொன் போஸ்கோ குருவாவதற்குப் பெரிதும் உதவியதாக ஜான் போஸ்கோவின் நினைவுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணமாகப் பரவலாக அறியப்படுகிறார். வாழ்க்கை வரலாறுகலோசோவின் இளமைப் பருவம் குறித்தான சான்றுகள் போதுமானதாக இல்லை அதிக குறிப்பில்லை. 1872 ஆம் ஆண்டில், இவர் தூரின் பல்கலைக்கழகத்தில் இறையியலில் பட்டம் பெற்றார். 1813-ஆம் ஆண்டில், பெர்சானோ டி சான் பியேத்ரோ நகரத்தின் உதவி குருவாக தன் சகோதரரோடு பணியாற்றினார். 1829-ஆம் ஆண்டு, தனது 70-ஆம் அகவையில், மோரியால்தோ ஊரின் பங்கு குருவானார். அங்குதான் இவர் இளம் போஸ்கோவைச் சந்தித்தார். அன்றைய மறைஉரையினை மனப்பாடம் செய்து சொல்லும் இளைஞன் போஸ்கோவின் திறமையால் இவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஆதலால் போஸ்கோ குருவாக திருநிலைப்படுத்தப்பட ஏதுவாக அவருக்கு தானே கல்வி கற்பிக்க முன்வந்தார்.[1] ஒரு வருடம் கழித்து, நவம்பர் 21, 1830-இல், கலோசோவுக்கு மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டது.[2] மரணப் படுக்கையில் இருந்தபோது, போஸ்கோவை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று இவர் கேட்டார். போஸ்கோ இவர் இறப்பதற்கு சற்று முன்பு சந்தித்தார். வலியால் பேச முடியாமல், கலோசோ போஸ்கோவிடம் ஒரு பெட்டியின் சாவியைக் கொடுத்து, அதில் உள்ளவை அவருக்கு மட்டுமே உரியது என்று கூறினார். கலோசோவின் இறுதிச் சடங்கில், போஸ்கோ அந்தச் சாவியை கலோசோவின் பேரக்குழந்தைகளிடம் கொடுத்தார்.[2] பெட்டகத்திற்குள் ஆறாயிரம் லேரேக்கள் இருந்தன, அதை போஸ்கோ ஏற்க மறுத்துவிட்டார். இவரது இழப்பால் போஸ்கோ மிகவும் வேதனைப்பட்டார்.[1] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia