டாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம்
டாக்டர் அரி சிங் கவுர் பல்கலைக்கழகம் என்பது (ஆங்கிலம்: Dr Harisingh Gour Vishwavidyalaya; Hindi: डॉ. हरिसिंह गौर विश्वविद्यालय) டாக்டர் அரி சிங் கவுர் விஷ்வவித்யாலயா என்றும் சாகர் பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள சாகர் நகரில் அமையப்பெற்றுள்ளது. ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். 1946-ஆம் ஆண்டு சூலை மாதம் 18ஆம் தேதி பிரித்தானிய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட போது இப்பல்கலைக்கழகம் சாகர் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. பின்னர்,1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இப்பல்கலைக்கழகத்துக்கு, இதனை நிறுவிய சர் அரி சிங் கவுரின் பெயரை மாநில அரசு சூட்டியது.[3] இப்பல்கலைக்கழகம் மத்தியப் பிரதேசத்தின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.[4] பெருமைமத்தியப் பிரதேசத்தின் பழமையான பல்கலைக்கழகமாக இது இருந்ததால், மாநிலத்தின் பெரும்பாலான கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தி இணைவுக் கல்லூரிகளாக இருந்தன. ஜபல்பூர் கல்லூரி, இந்தியாவின் பழமையான அறிவியல் கல்லூரியாகும். மத்திய இந்தியாவின் பழமையான பொறியியல் கல்லூரியான ஜபல்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியாக இருந்தது. வளாகம்![]() டாக்டர் அரி சிங் கவுர் பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம் பதாரியா மலைகளில் உள்ள சாகர் நகரில் அமைந்துள்ளது. இது 850 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தில் பல இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தொலைதூரக் கல்விப் பிரிவுகளும் உள்ளன. மாணவர்களுக்கு மருத்துவ அறிவியலில் பயிற்சி அளிக்க ஒரு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. மாணவ மாணவிகலுக்குத் தனித்தனி விடுதிகள், அரங்கம், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி அரங்கம் என மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ளது. துறைகள்பல்கலைக்கழகம் இளங்கலை, முதுநிலை, முனைவர் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் போன்ற அனைத்து நிலைகளிலும் படிப்புகளை வழங்குகிறது. இது தொலைதூரக் கல்வித் திட்டங்களையும் வழங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பின்வரும் துறைகள் உள்ளன:
மேனாள் மாணவர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia