டியர்ரா சாண்டா பொழுதுபோக்கு பூங்காடியர்ரா சாண்டா (Tierra Santa ) என்பது அர்கெந்தீனாவில் புவெனஸ் ஐரிஸ் என்னுமிடத்தில் அமைந்துள்ள மதம் தொடர்புடைய பொழுதுபோக்கு பூங்காவாகும். இது உலகின் மதம் சார் முதல் பொழுதுபோக்கு பூங்கா.[1] விரிவாக்கம்பார்வையாளர்களுக்கு, இயேசு காலத்தில் இருந்த எருசலேமில் தெருக்களை அப்படியே காட்சிப்படுதுகிறது. விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து படிப்படியாகக் காட்சிகளை வாழ்கிறார்கள். மேலும் கிறிஸ்தவர்கள், யூதர்கள், மற்றும் உரோமர்கள் பண்பாடும் இதில் அடங்கும் . ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு மணி நேரத்திற்கும் ஒரு பாறைக்கு பின்னாலிருந்து 18 மீட்டர் (59 அடி) இயேசு சிலை எழுகிறது.[2] பார்வையாளர்களுக்கு இது ஒரு புனிதமான மத அனுபவம். ஆனால் இணையத்தில் இதை ஏளனமாக தூண்டுபவை என விவரிக்கப்படுகிறது.[3] இந்த பூங்காவில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மற்றும் அன்னை தெரேசா போன்ற பல 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்று நபர்களின் சிலைகளும் உள்ளன. பூங்கா ஊழியர்களின் கூற்றுப்படி, அவர்கள் "அமைதிக்காக போராடிய" வரலாற்று நபர்கள் என்பதால் பூங்காவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியது. தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia