தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா
தங்கசேரி அணைகரை சுற்றுலாப் பூங்கா (Thangassery Breakwater Tourism Park) இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு சுற்றுலாத் தலமாகும். [1] கொல்லம் மாவட்டத்தில் கடலோர நகரமான தங்கசேரியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று பூங்கா திறக்கப்பட்டது, [2] அதன் பின்னர் ஏராளமான பார்வையாளர்களையும் ஈர்த்து வருகிறது. [3] அரபிக் கடலின் அழகிய காட்சிகளைக் கொண்ட இந்த பூங்கா ஓர் அழகான நீர்முகப்பு பகுதி இடமாகும். [4] குழந்தைகள் விளையாட்டு மைதானம், படகு சவாரி ஏரி, உணவு அரங்கம் மற்றும் பல நினைவு பரிசு கடைகள் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. 400 பேர் வரை தங்கக்கூடிய திறந்தவெளி அரங்கமும் இங்கு உள்ளது. [5] கடலோர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறையால் தொடங்கப்பட்டது இந்த தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா திட்டமாகும் [6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia