தாமல் தாமோதரப் பெருமாள் கோயில்
தாமல் தாமோதரப் பெருமாள் திருக்கோயில் என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி திருத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். தாமோதரப்பெருமாள்யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டவன் என்ற பொருளில் தாமோதரன் என்ற பெயர் கண்ணனுக்கு ஏற்பட்டது. தாம+உதரன் = தாம்பு (கயிறு) உதரன் (வயிற்றைக் கொண்டவன்) கயிற்றால் கட்டபட்ட வயிற்றை உடையவன் என்ற பொருளில் கண்ணன் தாமோதரன் என்று அழைக்கபடுகிறான். தாமோதரனின் தரிசனம் வேண்டி இங்கிருந்த மகரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்கிய கண்ணன் தாமல் திருத்தலத்தில் தாமோதரனாகக் காட்சி தருகின்றார். பழைமைக்குச் சான்றாக தாமல் பெருமானின் திருவயிற்றில் கயிறு பதிந்த தழும்பு கொண்ட அரிய அமைப்பாக உள்ளது. [1] தாமல் பெயர்க்காரணம்மத்வ சம்பிரதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் வைணவ சம்பிரதாயத்தினருக்கு மத்வ சம்பிரதாயத்தினரால் அளிக்கப்பட்டது இக்கோயில். 300 ஆண்டுகளுக்கு முன்னர் மத்வ சம்பிரதாயத்தினர் இத்திருக்கோயிலைக் காத்து நிர்வகித்து வந்ததன் பொருட்டு, இன்னமும் தாமல் பெருமாளுக்கு கோபி சந்தனம் இடும் முறையே வழக்கமாக உள்ளது.[1] கோயில் அமைப்புஇக்கோயிலில் மூலவரான தாமோதரன் நான்கு கைகளுடன் உள்ளார். பின்னிரு கைகளில் சங்கு, சக்கரமும், முன்னிரு கைகள் வரத அஸ்தம், ஊறு அஸ்த முத்திரைகளுடன், கழுத்தில் சாளாக்கிராம ஆரம், தசாவதார ஆரம் ஆகியவற்றை அணிந்து நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவர் மந்தசுமித பாரிசாதன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தாயார் திருமாலழகி, விஷ்ணு சுந்தரி, தனிக்கோயில் நாட்சியார் என்ற பெயர்களால் அழைக்கபடுகிறார். கோயில் தலமரமாக வில்வம், புன்னை ஆகியவை உள்ளன. விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. மூன்று திருத்தலங்கள்ஒரே நாளில், தாமல் தாமோதரப் பெருமாள் (நின்றான்), திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் (இருந்தான்), திருப்பாற்கடல் ரங்கநாதன் (கிடந்தான்) ஆகிய மூன்று திருத்தலப் பெருமாள்களையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. இம்மூன்று திருத்தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.[1] அமைவிடமும் பேருந்து வசதியும்சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் 85 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருப்புட்குழியிலிருந்து மூன்று கி.மீ தொலைவிலும் இத்தலம் உள்ளது. சென்னை-வேலூர் சாலையில் பாலுசெட்டிசத்திரம் (திருப்புட்குழி) சென்றால், திருப்புட்குழியிலிருந்து தாமல் செல்ல பேருந்து வசதி உள்ளது.[1] இக்கோயிலானது நாள்தோறும் காலை எட்டு மணி முதல், இரவு எட்டு மணிவரை திறந்திருக்கும். விழாக்கள்சித்திரை மகாசாந்தி ஓமம், கோடை உற்சவம், வைகாசி வசந்த உற்சவம், ஆனி இலட்சார்சனை, கருடசேவை, அன்னக்கூடை பாவாடை உற்சவம், ஆடி தாயார் திருவிளக்குப் பூசை, ஆவணி பவித்திர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், ஐப்பசி தீபாவளி, கார்த்திகை ஆஞ்சநையர் இலட்சார்ச்சனை, மார்கழி ஆண்டாள் போகி உற்சவம், மாசிமகம், பங்குனி உத்திர வைபவம் ஆகிய விழாக்கள் இங்கு நடக்கின்றன.[2] மேற்கோள்கள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia