நவம்பர் 26, 2008 ஆம் ஆண்டு
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி அஜ்மல் கசாப்புடன் பத்து பயங்கரவாதிகளுடன் கடல் வழியாக, மும்பைக்குள் ஊடுருவி, சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், தாஜ் தங்குவிடுதி, ஒபராய் தங்குவிடுதி மற்றும் லியோபோல்ட் கஃபே உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டது. இதில் 166 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தை மையப்படுத்தி ராம் கோபால் வர்மா அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காவல் துறை அறிக்கைகள், நீதி மன்றத் தீர்ப்பு, மற்றும் சம்பவத்தால் பாதிக்கப்பட நபர்கள் அளித்த தகவல்கள் ஆகியவை திரைக் கதைக்கு கருவூலமாக அமைந்ததுள்ளது.[7][8] மேலும் இப்படத்தை ஆராய்ந்த மத்திய திரைப்பட தணிக்கைக் குழு இப்படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் திரைப்படத்திர்க்கு முக்கிய உயிரோட்டமாக அமைந்திருப்பதால் இதில் எந்தக் காட்சியையும் நீக்காமல் அப்படியே அனுமதித்துள்ளது. ஆனால் இப்படத்திர்க்கு வயது வந்தவர்களுக்கு மட்டும் (A (Adult)) என்ற முத்திரைச் சான்றிதழ் வழங்கியுள்ளது.[9] மேலும் தீவிரவாதி அஜ்மல் கசாப் வேடத்தில் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் நடித்துள்ளார். இணை காவல்துறை ஆணையராக நானா படேகர் நடித்துள்ளார்.
விளம்பரப்படுத்துதல்
இத் திரைப்படத்தின் முதல் ஏழு நிமிட சிறப்பு காட்சியை ஈரோஸ் இன்டர்நேஷனல் சேனல் நிறுவனம் மூலம் யூடியூப் இணையத்தில் நவம்பர் 23, 2012, அன்று வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் சிறப்பு காட்சியை மகாராட்டிரம் இணை காவல்துறை ஆணையரான ராகேஷ் மரியா அவர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதனை இயக்குநர் கரண் ஜோஹர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றும் இதனுடன் சத்யா 2திரைப்படத்தின் முன்னோட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.
துணுக்குகள்
இப்படத்தின் முக்கியக் காட்சிகளை தாஜ் உணவகத்தில் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால், கலை இயக்குநர் உதய் சிங் அவர்களைக் கொண்டு அச்சு அசலாக தாஜ் தங்கு விடுதியியைப் போன்று ஒரு நகல் ₹நான்குகோடி செலவில் உருவாக்கப்பட்டது.[10]
முதல் தாக்குதலுக்குள்ளான லியோபோல்ட் கஃபேயின் உரிமையாளரே தனக்குச் சம்மந்தப்பட்ட காட்சியில் அவரே நடித்துள்ளார்.[11]
அஜ்மல் கசாப் கதாபத்திரத்தில் நடிக்க சுமார் 500 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதில் தில்லியைச் சேர்ந்த சஞ்சீவ் ஜெய்ஸ்வால் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.[12]