திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்![]()
திருவாமூர் பசுபதீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். அமைவிடம்இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் திருவாமூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்பு இவ்வூர் திருஆமூர் என்றழைக்கப்பட்டது. இத்தலத்தின் பெருமை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் காணப்படுகிறது.[1] இறைவன், இறைவிஇக்கோயிலின் மூலவராக பதிபதீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார்.கோயிலின் தல மரம் கொன்றை ஆகும். அப்பர் என்றழைக்கப்படுகின்ற நாவுக்கரசர் அவதரித்த பெருமையுடைய தலமாகும்.[1] அமைப்புசில ஊர்க் கோயில்களில் சிவன் ‘திருமுன்பு ‘(சந்நிதி) கிழக்கு நோக்கியும், அம்மன் ‘திருமுன்பு’ தெற்கு நோக்கியும் இருக்கும்; அவற்றுள் இவ்வூரும் ஒன்று.[2] பழமை வாய்ந்த இக்கோயிலின் மூலவருக்கு முன்பாக அப்பர் நின்ற நிலையில் உழவாரத்துடன் காணப்படுகிறார். அருணகிரிநாதர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி திருப்புகழில் பாடியுள்ளார். அப்பரின் மூத்த சகோதரியான திலகவதியாருக்கும், தாயாரான மாதினியார், தகப்பனாரான புகழனார் ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றிலும் அப்பர் சிற்பம் உள்ளது.[1] விழாக்கள்அப்பருக்கு குரு பூசை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்திலும், அவதார நாள் பங்குனி மாதத்திலும் நடைபெறுகிறது.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia