தென்காரையூர் சர்க்கரைதென்காரையூர் சர்க்கரை சிறந்த கொடை வள்ளல். இவரைப்பற்றிக் கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது.[1] சவுக்கடிசொட்டை என்பது இரண்டு பக்கமும் கூர்மை உள்ள ஒருவகை வேல். இந்தப் படைக்கருவியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர் தென்காரையூர் சர்க்கரை. இவரை நாடி நாவலர் ஒருவர் வந்தார். சர்க்கரையார் அவருக்குப் பொன் தட்டில் பரிசுகளை வைத்துத் தந்தார். வந்தவர் அதனை வாங்கிக்கொள்ளவில்லை. மாறாக, அருகில் கிடந்த சாட்டை ஒன்றை எடுத்து, சர்க்கரையாரை அடித்தார். சர்க்கரையார் சவுக்கடியை வாங்கிக்கொண்டே, “நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ஏன் என்னை அடிக்கிறீர்” என வினவினார். “தங்களிடம் என் நா வளத்தை வெளிப்படுத்தலாம் என்று வந்தேன். நீங்களோ எனக்குப் பரிசு தந்து என்னைக் கேவலப்படுத்திவிட்டீர். அதனால் அடித்தேன்” என்றார் நாவலர். “உண்மைதான். நான் ஒரு பணிக்காக அவசரமாக வெளியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். உங்களைக் காக்க வைக்கக் கூடாது என்று இப்படிச் செய்தேன்” என்றார், சர்க்கரையார். நாவலர் தன் செயலுக்கு நாணி, சர்க்கரையாரைப் போற்றிப் பாடினார். இந்தச் செய்தியைக் கூறும் கொங்குமண்டல சதகம் பாடல் [2] சவுக்கால் அடித்த நாவலர் பாடிய பாடல்கள் [3] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia