தெஹ்ரான் தாக்குதல்கள், ஜூன் 2017
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திலும் ஆயத்துல்லாஹ் கொமேனியின் நினைவிடத்திலும் ஒரே நேரத்தில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரு தாக்குதல்களும் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் ஆகும். [3] இவ்விரு தாக்குதல்களிலும் 19 பேர் கொல்லப்பட்டனர். மாண்டவர்களில் தாக்குதல் நடத்திய ஏழு பயங்கரவாதிகளும் அடங்குவர். தாக்குதல்ஜூன் 7, 2017 அன்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். ஆயத்துல்லாஹ் கொமேனியின் நினைவிடத்தில் அயுதம் தாங்கிய மூன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். தாக்கிய பயங்கரவாதிகளில் ஒருவர் தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்து மரணமடைந்தார். நாடாளுமன்றத் தாக்குதலில் பயங்கரவாதிகள் சிலரைப் பணையக் கைதிகளாக்கினர்.[4] இசுலாமிய அரசு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia