தேசிய ஐதரசன் ஆற்றல் செயல் திட்டம்தேசிய ஐதரசன் ஆற்றல் செயல் திட்டம் (National hydrogen energy road map) என்ற திட்டம் இந்தியாவில் தேசிய ஐதரசன் ஆற்றல் வாரியத்தால் 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஐதரசன் ஆற்றலின் பல்வேறு துறைகளில் இதன் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்நுட்ப இடைவெளிகளைக் குறைக்க 2006 ஆம் ஆண்டில் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. பங்கீடு , பயன்பாடுகள், பாதுகாப்பு, குறியீடுகள், தரநிலைகள் மற்றும் 2020 வரையிலான காலத்திற்கான திறன் மேம்பாடு ஆகியவை இத்திட்டத்தின் இலக்குகளாகும்.[1] [2] [3] இந்த திட்டம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.[4] பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியில் இந்தியா சார்ந்திருப்பதைக் குறைத்து, பல்வேறு, உள்நாட்டு, மற்றும் நிலையான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொலைதூர கிராமப்புறம் மற்றும் பிற மின்சாரம் பற்றாக்குறை பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல்; போக்குவரத்து மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருளாக ஐதரசனை பயன்படுத்துவதை ஊக்குவித்தல்; ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றிலிருந்து கார்பன் உமிழ்வைக் குறைத்தல்; மின்சார உற்பத்தியின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரித்தல்; 2020 ஆம் ஆண்டளவில் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் மற்றும் 2020 ஆம் ஆண்டளவில் ஐதரசன் அடிப்படையிலான உள் எரி இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் கலங்களில் இயங்கும் 1 மில்லியன் வாகனங்கள் தயாரித்தல் [5] ஆகியவை இத்திட்டத்தின் கூடுதல் இலக்குகளாகும். மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia