தேவதாஸ் தேவபிரபாகரா
தேவதாஸ் தேவபிரபாகரா (Devadas Devaprabhakara) (1932-1978) ஒரு இந்திய கரிம வேதியியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.[1] இவர் சுழற்சி அல்லீன்கள் மற்றும் நடுத்தர வளையம் பற்றிய ஆய்வுகளுக்காக அறியப்பட்டார்.[2] வளைய அல்லீன்கள் மற்றும் நடுத்தர வளைய டையீன்களின் ஒடுக்கம், அவற்றின் குறைப்பு, நீர்போரேற்றல் மற்றும் மாற்றியமாக்கல் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் மற்றும் பல சுழற்சி நீர்க்கரிமங்களின் தொகுப்பு ஆகியவை அடி மூலக்கூறுகளின் புரிதலை பகுத்தறிவதில் உதவியது.[3] தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒப்பார்க்குழு மீளாய்வு செய்யக்கூடிய கட்டுரைகளாக வெளியிட்டார். பல சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் மூலம் இவர் தனது ஆய்வுகளை வெளியிட்டார்.[4] இந்திய அறிவியல் அகாடமியின் இன்லைன் களஞ்சியம் அவற்றில் 48 பட்டியலிடப்பட்டுள்ளது.[5] இந்திய அறிவியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.[6] விஞ்ஞான ஆராய்ச்சிக்கான இந்திய அரசாங்கத்தின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், 1976 ஆம் ஆண்டில் இவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை இவரது இரசாயன அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக வழங்கி கெளரவித்தது.[7] இறப்பு12 ஜனவரி 1978ல் தனது 38ஆவது வயதில் இவர் காலமானார்.[6] உசாத்துணைhttps://en.wikipedia.org/wiki/Devadas_Devaprabhakara மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia