நம்பெருமாள் மும்மணிக்கோவைநம்பெருமாள் மும்மணிக்கோவை [1] என்னும் சிற்றிலக்கியம் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் பாடப்பட்டது. மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியம் பொதுவாக 30 பாடல்களைக் கொண்டிருக்கும். இந்த நூல் முழுநூலாகக் கிடைக்கப் பெறவில்லை. உரைநூல்களில் மேற்கோள் பாடல்களாச் சில பாடல்களே கிடைத்துள்ளன. 'நம்பெருமாள்' என்னும் தொடர் திருவரங்கப் பெருமானைக் குறிக்கும். மாறன் அலங்காரம் என்னும் நூல் இந்த மும்மணிக்கோவையின் ஆசிரியரான திருக்குருகைப் பெருமாள் கவிராரால் படைக்கப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள அணிகளுக்கு மேற்கோள் பாடல்களையும் இவரே குறிப்பிட்டுள்ளார். இவை பழைய நூல்களிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. அல்லது இவரே பாடிச் சேர்த்தவை. பாடல் கிடைக்காத அணிகளைக் காட்ட இந்த மும்மணிக்கோவை நூலைப் பாடிச் சேர்த்துக்கொண்டிருக்கிறார். நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் நூல் இருந்ததை "ஒழிந்த அகலம் நம்பெருமாள் மும்மணிக்கோவை விருத்தியில் காண்க" என மாறனலங்கார உரையாசிரியர் குறிப்பிடுவதிலிருந்து அறிய முடிகிறது. [2] பாடல்கள் - எடுத்துக்காட்டு(பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை) வெண்பா
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia