நாகர்கோவில் பயணிகள் தொடருந்துநாகர்கோவில்-கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து (Nagercoil Passenger)கோயம்புத்தூர் சந்திப்பு முதல் நாகர்கோவில் சந்திப்பு வரை செல்கிறது.[1] இது 384/3 என்ற எண்ணைக் கொண்டது. இது இந்தியாவில் நெடுந்தொலைவுப் பயணிகள் தொடருந்துகளில் ஒன்றாகும். இது 2020 முதல் கோயம்புத்தூர்-நாகர்கோவில் விரைவுத் தொடருந்து என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பிறகு இது சில தொடருந்து நிலையங்களில் நிற்பதில்லை. மேலும் இது பகல்நேரச் சேவையாகவும் மாற்றப்பட்டது.[2][3] இப்போது இந்தத் தொடருந்தின் முதன்மை நிறுத்தங்களாக கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, பிளமேடு, சிங்கா நல்லூர், இருகூர், சோமனுர், திருப்பூர், ஈரோடு, கொடுமுடி, புகலுா், கரூர், திண்டுக்கல், டிசம்பர் சாலை, சோழவந்தான், மதுரை, திரு்ப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியுர், நாகர்கோவில் ஆகியன உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia