நுண்ணுயிர் எதிர்ப்பி
![]() ஒரு பொதுவான பயன்பாட்டில், நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic) (பண்டைக் கிரேக்கம்: ἀντί அல்லது நுண்ணுயிர்கொல்லி என்னும் சொல்லானது நுண்ணுயிரைக் கொல்லும் அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதான துணைப்பொருள் அல்லது உட்பொருள் எனப் பொருள்படும்.[1] நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பூஞ்சை மற்றும் ஓரணு உயிரி உள்ளிட்ட நுண்ணுயிர்ப் பொட்களால் ஏற்படும் தொற்றுக்களுக்கான சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படும் எதிர்-நுண்ணுயிர் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்..[சான்று தேவை] "நுண்ணுயிர் எதிர்ப்பி" என்ற சொற்றொடரினை, 1942ஆம் ஆண்டு செல்மன் வாக்ச்மேன், அதிகபட்சமான வீரியக் குறைப்பில் பிற உயிர்ப் பொருட்களின் வளர்ச்சிக்கு எதிர்நிலையினதாக செயல்படும் நுண்ணுயிர்ப்பொருளால் உருவாக்கப்பட்ட எந்தத் துணைப்பொருளையும் விவரிப்பதற்காக உருவாக்கினார்.[2] இந்த வரையறையானது, நுண்மங்களை அழிக்கின்ற, ஆனால் நுண்ணுயிர்ப் பொருட்களால் உருவாக்கப்படாத (செரிமான நிணநீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்றவை) இயல்பாகவே தோன்றுகின்ற துணைப்பொருளை உள்ளிடவில்லை. மேலும் சல்ஃபோநமைட்கள் போன்ற கூட்டிணைப்பு எதிர்-நுண்ம உட்பொருட்களையும் உள்ளிடவில்லை. பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் 2000 அணுநிறைக்கும் குறைவான மூலக்கூறு எடை கொண்டு உண்மையில் சிறிய மூலக்கூறுகளாகவே இருக்கின்றன.[சான்று தேவை] மருத்துவ வேதியியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இப்போது அரைக் கூட்டிணைப்புகளாக உள்ளன.[3] பீட்டா-லாக்டமில் காணப்படுபவை போன்றவை அசலான உட்பொருட்களிலிருந்து பெறப்படும் வேதியியல் வழி மேம்படுத்தப்பட்டவையாகும் (இது பென்சிலியம் என்ற உறுப்பில் பூஞ்சையால் உருவாக்கப்படும் பென்சிலின், செபாலோஸ்போரின் மற்றும் கார்பாபெனிம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது). அமினோகிளைகோஸைட் போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வாழும் உயிர்ப்பொருளிலிருந்து இப்போதும் உருவாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றன; மற்றவை முற்றிலும் கூட்டிணைப்பு முறையில் உருவாக்கப்படுகின்றன. சல்போனமைட்ஸ், குயினோலோன் மற்றும் ஆக்ஸாலோலிடினோன். மேலும் இந்த தோற்றுவாய்-சார்ந்த வகைப்பாட்டிலிருந்து இயற்கையான, அரைகூட்டிணைவான மற்றும் கூட்டிணைவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இரண்டு பெரிய குழுக்களாக நுண்ணுயிர்ப்பொருள்களின் விளைவின்படி பிரிக்கலாம். இவற்றில் நுண்மங்களை அழிப்பவை பாக்டீரிசைடல் துணைப்பொருட்களாகும், அதேநேரத்தில் அவை பாக்டீரியல் வளர்ச்சியை முடக்க மட்டுமே செய்வது பாக்டீரியோஸ்டேடிக் துணைப்பொருட்கள் எனப்படுகின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் வரலாறு![]() 20ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் தொற்று நோய்களை நாட்டுப்புற மருத்துவத்தின் அடிப்படையிலேயே பலரும் குணப்படுத்திக்கொண்டனர். புராதன சீன மருத்துவத்தில் தொற்றிற்கான குணப்படுத்தல்களாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற உட்பொருட்களைக் கொண்டிருக்கும் தாவரங்களைக் கொண்டு சிகிச்சையளிப்பது என்பதானது, 2500 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே தொடங்கியிருக்கிறது.[4][5] புராதன எகிப்தியர்கள், புராதன கிரேக்கர்கள் மற்றும் இடைக்கால அரேபியர்கள் உள்ளிட்ட வேறு பல பண்டைய கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு பூஞ்சைகளையும் தாவரங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.[6][7] 17 ஆம் நூற்றாண்டில் சின்சோனா மரப்பட்டை மலேரியாவிற்கான சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த நோய் பிளாஸ்மோடியம் என்னும் உறுப்பின் புரோட்டோசான் ஒட்டுண்ணிகளால் ஏற்படுவது.[8] இந்த நோய்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான அறிவியற்பூர்வமான முயற்சிகள், கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி வேதிச்சிகிச்சையின் உருவாக்கம், இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தனிமைப்படுத்துதல் ஆகியவை நுண்ணுயிர் எதிர்ப்பி வளர்ச்சியில் சாதனைக் கற்களாக உள்ளன.[9] உண்மையில் நுண்ணுயிர் எதிர்மை (antibiosis) என்று அறியப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மங்களுக்கு எதிராக செயல்படும் மருந்துகளாகும். 'உயிரெதிரி' என்று பொருள் கொள்வதான ஆண்டிபயாஸிஸ் என்ற சொல்லினை இந்த மருந்துகளால் ஏற்பட்ட அரிய நிகழ்வை விளக்குவதற்கான பெயராக பிரெஞ்சு நுண்மவியலாளர் வைலமின் அறிமுகப்படுத்தினார்.[10] (காற்றிலிருந்து உருவாகும் பேசில்லஸ் பேசில்லஸ் அந்த்ராஸிஸின் வளர்ச்சியை தடுக்கும் என்பதை லூயி பாஸ்டரும் ராபர்ட் கோச்சும் கண்டுபிடித்தபோது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்பன 1877ஆம் ஆண்டு முதன்முதலாக விளக்கப்பட்டது.[11]). 1942ஆம் ஆண்டில் அமெரிக்க நுண்ணுயிரியலாளரான செல்மன் வாக்ஸ்மேன், இந்த மருந்துகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்று மறுபெயரிட்டார்.[2][10] ஒரு அறிவியலாக கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி வேதிச்சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி முன்னேற்றத்தின் கதை 1880களில் பால் என்ரிச் என்னும் ஜெர்மானிய ஆய்வாளருடன் தொடங்குகிறது. டாக்டர் என்ரிச், சில குறிப்பிட்ட வர்ணங்கள் மனிதர்கள், விலங்குகள் அல்லது நுண்ம உயிரணுக்களில் கலந்து வண்ணமேற்படுத்தலாம் என்பதைக் கவனித்தார். அவர் மனித உறுப்புகளை பாதிக்காமல் நுண்மங்களில் கலந்து அவற்றை கொல்லக்கூடிய தேர்வு மருந்தாகச் செயல்படுவதற்கான வாய்ப்பைச் சில குறிப்பிட்ட வர்ணங்கள் அல்லது வேதிப்பொருட்கள் கொண்டிருக்கலாம் என விளக்கினார். பல பரிசோதனைகளுக்குப் பின்னர் பல்வேறு உயிர்ப்பொருட்களுக்கு எதிரான வர்ணங்களின் நூற்றுக்கணக்கான சோதனைகளால் சல்வர்சான் என்ற மருத்துவரீதியான பயன்மிக்க, மனிதன் உருவாக்கிய நுண்ணுயிர் எதிர்ப்பியினை அவர் கண்டுபிடித்தார்.[10][12][13] இருப்பினும், சல்வர்சானின் எதிர்மறையான பக்கவிளைவு பின்னாளிள் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி பென்சிலினுடன் இணைந்திருந்தமையானது இதை நுண்ணுயிர் எதிர்ப்பிக்காக பயன்படுத்துவதை மாற்றியமைத்தது. நுண்ணுயிர் எதிர்ப்பிப் புரட்சியின் தோற்றுவாயாகக் குறிப்பிடும் எர்லிச்சின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து 1932ஆம் ஆண்டு டோமக் புரோன்டோசில் என்பதனைக் கண்டுபிடித்தார்.[13] புரோன்டோசில் என்னும் வர்த்தகரீதியான முதல் எதிர்- நுண்ம நுண்ணுயிர் எதிர்ப்பியினை ஜெர்மனியில் உள்ள ஐஜி ஃபர்பன் கூடத்தின் பேயர் ஆய்வுக்கூடங்களில் கெர்ஹார்ட் டோக்மாக்கால் என்பதனை (இவர் 1939ஆம் ஆண்டு தன்னுடைய முயற்சிகளுக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்) வழி நடத்திய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியது. முதல் சல்போனமைட் மருந்தின் கண்டுபிடிப்பும் உருவாக்கமும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் யுகத்தை துவக்கின. நுண்ணுயிர்ப் பொருட்களுக்கு இடையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புகள் மீதான முந்தைய ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்ப் பொருட்களால் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாஸ்டர் "நுண்மங்களுக்கு இடையில் உள்ள எதிர்ப்பொருட்களில் நம்மால் ஊடுருவ முடியும் என்றால் அது 'நோய்நீக்கிகளுக்கான மிகப்பெரிய நம்பி்க்கையினை வழங்க வாய்ப்பிருக்கிறது" என்பதை உணர்ந்தார்.[14] 1875ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஜான் டிண்டால், பென்சிலியம் எஸ்பிபி. என்னும் நுண்ம எதிர்ப்பொருட்களை விளக்கினார்.[14] இருப்பினும் அவருடைய ஆராய்ச்சியை, 1928ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் பிளெமிங் பென்சிலினைக் கண்டுபிடிக்கும்வரையிலும், அறிவியல் சமூகம் பெரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பின்னர் எர்ன்ஸ்ட் செய்ன் மற்றும் ஹோவார்ட் ஃப்ளோரி ஆகியோர் பி.பிரெவிஸ்ஸிலிருந்து கிரேமிசைடின் என்ற பெயர் கொண்ட மற்றொரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பி போன்ற துணைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிளெமிங்கின் ஆராய்ச்ச்சியில் ஆர்வம் காட்டினர். 1939ஆம் ஆண்டு ரெனே துபோ கிரேமிசைடினைத் தனிமைப்படுத்தினார். இவை, இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில், காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதில் அதிகபட்சமான பயன் கொண்டிருப்பதை நிரூபிக்க வர்த்தக ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகும்.[15] ஃப்ளோரி மற்றும் செய்ன் ஆகியோர் பென்சிலினைப் பிரித்தெடுப்பதில் வெற்றிபெற்றனர். இந்த பிரித்தெடுத்த நுண்ணுயிர் எதிர்ப்பி பரந்த அளவிலான நுண்மங்களுக்கு எதிராக எதிர் பாக்டீரியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பது நிரூபணமானது. இது குறைவான நச்சுத் தன்மையைக் கொண்டிருந்தது. இதனால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுதல் குறைந்தது. மேலும் இதன் செயல்பாடு, சல்போனமைட்களாக கிடைத்த கூட்டிணைப்பு நுண்ணுயிர் எதிர்ப்பி வகையைப் போன்று அல்லாமல், சீழ் போன்ற உயிர்ப்பொருள் உட்பொருட்களால் தடுக்கப் பெறவில்லை. பென்சிலினின் உருவாக்கம் இதே போன்ற திறன்களுடன் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி உட்பொருட்களுக்கான தேடலில் ஆர்வத்தை தூண்ட வழியமைத்தது.[16] 1945ஆம் ஆண்டு, எர்ன்ஸ் செய்ன், ஹோவார்ட் ஃப்ளோரி மற்றும் அலெக்ஸாண்டர் பிளெமிங் தங்களுடைய பென்சிலின் கண்டுபிடிப்பிற்காக, நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர். எதிர் நுண்ம உட்பொருட்களை கவனத்தோடும், முறையாகவும் தேடிய அணுகுமுறைக்கு வித்திட்டவர் என துபோவுக்கு ஃப்ளோரி நன்றி தெரிவித்தார். இதுபோன்ற முறைமை பென்சிலின் ஆராய்ச்சியின் ஃப்ளோரியால் புத்தாக்கம் செய்யப்பட்ட கிரேமிசைசின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது.[15] எதிர் நுண்ணுயிர் மருந்தியக்கவியல்![]() நுண்ணுயிர் எதிர்ப்பியின் செயல்பாட்டின் மீதான மதிப்பீடு எதிர் நுண்ணுயிர் சிகிச்சையின் வெற்றிக்கு மிகத் தேவையானதாகும். உயிர்ப்பொருள் பாதுகாப்பு இயக்கவியல்கள், தொற்றின் இடவமைப்பு போன்ற நுண்ணுயிரியல் அல்லாத காரணிகள் நோய் உள்ளுறைபவையாக இருக்கின்றன என்பதோடு அவசியமான மருந்தியக்கத் தாக்கியல் (pharmacokinetics) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியின் மருந்தியக்கவியலின் உடைமைப் பொருட்களாக இருக்கின்றன.[17] அடிப்படையிலேயே, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மத்திற்கு எதிரான அபாயமான அல்லது நுண்மக் கொல்லிச் செயல்பாடு கொண்டவை அல்லது நுண்மத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் நுண்மத்தடுப்பான் என வகைப்படுத்தப்படுகின்றன.[18] இந்த வகைப்படுத்தல்கள் ஆய்வகச் செயல்பாட்டையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நடைமுறையில் இவை இரண்டுமே நுண்மம்சார் தொற்றினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திறன் கொண்டவை.[17][19] செயற்கையான சூழ்நிலைகளில் செயல்பாட்டின் அளவீட்டை மதிப்பிடுவதற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாட்டு பண்பாக்கமானது, குறைந்தபட்ச தடுப்பாக்கச் செறிவாக்கம் மற்றும் எதிர்-நுண்மங்களில் குறைந்தபட்ச நுண்மக் கொல்லிச் செறிவை அளவிடுவது போன்ற எதிர்-நுண்மங்களின் திறனுடைய சிறந்த குறிகாட்டிகளாக உள்ளன.[20] இருப்பினும், மருத்துவ நடைமுறைகளில் இந்த அளவீடுகள் மட்டுமே மருத்துவ முடிவுகளை முன்னூகிப்பதற்கு போதுமானவையாக இருப்பதில்லை. நுண்ணுயிர் எதிர்ப்பியின் மருந்தியத் தாக்கியலின் விபரங்களை எதிர்-நுண்மச் செயல்பாட்டுடன் இணைப்பதன் மூலம் சில மருந்தியல் அளவைகள் மருந்துத் திறனின் குறிப்பிடத்தகுந்த குறிகாட்டிகளாக விளங்குகின்றன.[21][22] நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு செறிவு-சார்ந்ததாக உள்ளன. மற்றும், அவற்றின் பண்பாக்க எதிர்-நுண்மச் செயல்பாடு, உயர் நுண்ணுயிர் எதிர்ப்பியானது செறிவாக்கங்களோடு நேர்முறையாக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.[23] இருப்பினும், குறிப்பிட்ட கால அளவிற்கு குறைந்தபட்ச தடுப்பு ஊனீர் செறிமானமாக்கத்தை தக்கவைப்பது மிக அவசியமானதாகும்.[23] நுண்ணுயிர் எதிர்ப்பியின் கொல்திறனுக்கான ஆய்வக மதிப்பீடு, நுண்ணுயிர் எதிர்ப்பியல் செயல்பாட்டின் நேரம் அல்லது செறிவாக்கச் சார்பை தீர்மானிக்க தேவையாக உள்ளது.[17] நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் வகைகள்நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாக அவற்றின் செயல்பாட்டு இயக்கம், வேதியியற் கட்டுமானம் அல்லது செயல்பாட்டு பிரிவுப்பகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மச் செயல்பாடுகள் அல்லது வளர்ச்சி நிகழ்முறைகளை இலக்காகக் கொள்கின்றன.[10] நுண்ம உயிரணுச் சுவரைக் குறிவைப்பவை (பென்சிலின்கள், செபாலோஸ்போரின்கள்), அல்லது உயிரணு மேற்புறச்சவ்வை குறிவைப்பவை (பாலிமிக்ஸின்கள்) அல்லது அத்தியாவசிய நுண்ம நொதிகளில் குறுக்கிடுபவை (குயினலோன்கள், சல்போனமைடுகள்) ஆகிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இயல்பாகவே நுண்மக்கொல்லிகளாகவே உள்ளன. இவற்றில், அமினோகிளைகோசைட்கள், மேக்ரோலிட்கள் மற்றும் டெட்ராசைக்ளின்கள் போன்ற புரதக் கூட்டிணைப்புகளை இலக்காக கொள்பவை வழக்கமாக நுண்ம நிலைப்பொருளாக இருக்கின்றன.[24] மேற்கொண்டு வகைப்படுத்தல் என்பதானது, அவை இலக்கு வைப்பவற்றைப் பொறுத்து அமைகின்றது. "குறுகலான-பிரிவுப்பகுப்பு" நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அலகு-எதிர்மறை அல்லது அலகு-நேர்மறை நுண்மம் போன்ற நுண்ம வகைகளையே இலக்காகக் கொள்கின்றன. அதேசமயத்தில், பரந்த-பிரிவுப்பகுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரந்த அளவிலான நுண்மஙகளை இலக்காகக் கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மூன்று புதிய வகைகளிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மருத்துவப் பயன்பாட்டிற்கு வெளிப்பட்டுள்ளன. இப்புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பின்வரும் மூன்று வகைகளில் அமைகின்றன: (1) சைக்ளிக் லிப்போபெப்டைட்ஸ் (டெப்தோமைசின்), (2) கிளைசைக்ளின்ஸ் (டைஜிசைக்ளின்), மற்றும் (3) ஆக்ஸாசோலிடினோன்ஸ் (லைனிசாலிட்). இவற்றில், டைஜிசைக்ளின் என்பது, ஒரு பரந்த-பிரிவுப்பகுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பியாகும்; மற்ற இரண்டும் அலகு நேர்மறை தொற்றுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த முன்னேற்றங்கள் தற்போதுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான நுண்ம எதிர்ப்பிற்கு எதிர்வினை புரியும் என்று நம்பிக்கை அளிக்கின்றன. தயாரிப்பு1939ஆம் ஆண்டு ஃபுளோரி மற்றும் செய்ன் ஆகியோரின் முன்னோடியான முயற்சி, மருந்திற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் முக்கியத்துவம், மற்றும் அவற்றின் மீதான ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு போன்றவற்றிற்கு வழியமைத்துள்ளது. தயாரிப்புச் செயல்முறையானது, நுண்ணுயிர்ப்பொருட்களைப் பரந்த அளவுகளில் சோதனையிடுவது மற்றும் அவற்றின் சோதனை மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புற்றுள்ளது. தயாரிப்பு என்பது, வழக்கமாக காற்றோட்டமான நிலையில் நொதிக்கவைக்கப்படுதலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. மருந்து அளிப்புவாய்வழியான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சாதாரணமாகவே உட்செலுத்தப்படுகின்றன. நாள்பட்ட மற்றும் தீவிரத் தொற்றுகளுக்கு சிரைவழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுகின்றன. சில சமயங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கண் சொட்டுமருந்துகள் அல்லது களிம்புகள் போன்று வெளிப்புறப் பயன்பாடும் கொண்டுள்ளன. பக்க விளைவுகள்நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாகப் பாதுகாப்பானவை மற்றும் நன்கு நீடிக்கக்கூடியவை என்று கருதப்படினும், அவை பரந்த அளவிற்கான எதிர்மறையான விளைவுகளுடனும் தொடர்புற்றுள்ளன.[25] பக்க விளைவுகள் என்பவை பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இலக்கான உடலுறுப்புகளைப் பொறுத்து, பல்வேறு வகைகளாகவும், மாறுபடுபவையாகவும் மிகவும் தீவிரமானவையாகவும் உள்ளன. புதிய மருந்துகளின் பாதுகாப்பு விபரங்கள் நன்கு நிறுவப்படாது இருக்கலாம்.[25] எதிர்மறையான விளைவுகள் காய்ச்சல் மற்றும் குமட்டல் துவங்கி பல ஒவ்வாமை எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கலாம்.[சான்று தேவை] மிகப் பொதுவான பக்க விளைவுகளுள் ஒன்று வயிற்றுப் போக்காகும். இது சில நேரங்களில் க்ளோஸ்ரிடியம் டிஃபைசலால் என்னும் நுண்ணுயிரால் ஏற்படுகிறது. இது செரிமானச் சுரப்பியின்[26] வழக்கமான சமநிலையை நுண்ணுயிர் எதிர்ப்பி தொந்திரவுக்கு உட்படுத்துவதால் ஏற்படுகிறது, இதுபோன்ற நோய்விளைக்கும் நுண்மங்களின் அதிகமான வளர்ச்சி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அளிக்கப்படுகையில் உயிர்ச் சார்பிகளை உட்செலுத்துவதன் மூலம் தனிமைப்படுத்தப்படுகின்றன. [சான்று தேவை]. நுண்மத் தொகுப்பின் நுண்ணுயிர் எதிர்ப்பி-தூண்டிய குறுக்கீடு என்பது, இயல்பான கருப்பை சுரப்பியின் உட்பொருட்களாக காணப்படலாம். மேலும்,கருப்பையின் வாய்ப்பகுதியில் ஈஸ்ட் உயிரிகளின் அதிக வளர்ச்சிக்கு வழியமைக்கலாம்.[27] இதர பக்க விளைவுகள் மற்ற மருந்துகளுடான ஒருங்கிணைந்த செயல்பாட்டிலிருந்து ஏற்படலாம். முறைப்படுத்திய வீரிய மருந்துகளுடன் குயினோலன் நுண்ணுயிர் எதிர்ப்பியை அளிக்கையில், தசைநார் சேதத்திற்கான அபாயம் அதிகரிக்கலாம். மருந்துகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புகர்ப்பத்தடை மாத்திரைகள்கர்ப்பத்தடை மாத்திரைகளின் திறனுடன் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறுக்கீடு என்பது இரு வழிகளில் உண்டாகிறது. செரிமானச் சுரப்பியின் மேம்படுத்துதல், சினைப்பருவ இயக்குநீர் (Oestrogen) குறைவாக உறிஞ்சப்படுவதை விளைவிக்கலாம். மேலும், கல்லீரல் நொதிகளின் தூண்டுதலானது, மருத்துவத்தின் செயல்படும் உட்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, மருந்தின் பயனை பாதிக்கலாம்.[28] இருப்பினும், பெரும்பாலான ஆய்வுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கர்ப்பத்தடைகளோடு குறுக்கிடாது என்றே குறிப்பிடுகின்றன[28]. மிகச் சிறிய சதவிகிதத்திலான பெண்களே கர்ப்பத் தடை மாத்திரைகளின் குறைவான அளவுப் பயனை எதிர்கொண்டிருக்கிறார்கள். எனினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் இவற்றை எடுத்துக்கொள்கையில் கர்ப்பத்தடை மருந்துகளின் தோல்வி விகிதம் அதிகரிக்கிறது.[29] மேலும், செரிமானச் சுரப்பியில் ஏற்படும் குறுக்கீடு கர்ப்பத்தடையை பாதிக்கிறது என்பதை முற்றாக நிரூபிப்பதற்கான ஆய்வுகள் இல்லை.[30][31] எதி்ர்பூஞ்சை மருந்தான கிரைசியோஃபல்வின் மற்றும் பரந்த-பிரிவுப்பகுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிக்கான ரிஃபாம்பிசின் ஆகியவற்றால் கல்லீரல் நொதிகளின் தூண்டுதல் மூலமான ஒருங்கிணைந்த வாய்வழி கர்ப்பத்தடை மாத்திரையுடனான ஒருங்கிணைப்பு கொள்ளலாம் என்று கண்டறிந்துள்ளனர். எனவே, இத்தகைய எதிர் நுண்ம மருத்துவங்களைப் பயன்படுத்துகையில் கூடுதலான கர்ப்பத்தடை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றனர்.[28] மதுமது அருந்துதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு அல்லது வளர்ச்சிதை மாற்றத்தில் குறுக்கிடலாம்.[32] இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செயல்நீக்கம் செய்யும் கல்லீரல் நொதிகளின் செயல்பாட்டினைப் பாதிக்கலாம்.[33] மேலும், மெட்ரோனைடசால், டைனிடஸால், செபாமண்டோல், கெட்டாகானசோல், லேட்டமஃபோக்ஸ், செப்பெராசோன், செபானோக்ஸிம், மற்றும் ஃபுரோஸோலைடோன் உள்ளிட்ட சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மதுவுடன் வேதியியல் ரீதியாக எதிர்வினை புரியலாம். இதன் மூலம், கடுமையான வாந்தி, குமட்டல் மற்றும் மூச்சு விடுதலில் பிரச்சினை உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள் உருவாகலாம். எனவே, இதுபோன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக்கொள்கையில் மது அருந்துவது நல்லதல்ல.[34] மேலும் சில சூழ்நிலைகளில், டாக்ஸிசைக்ளின் மற்றும் எரித்ரோமைசின் சச்சினேட் ஆகியவற்றின் ஊனீர் அளவுகள் மது அருந்துவதால் குறி்ப்பிடத்தகுந்த அளவிற்குக் குறைந்துபோகலாம்.[35] நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு![]() நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்புக்கள் என்பவை, முன்னர் அபாயமானவையாக அறியப்பட்ட நுண்ணுயிர்களுக்கான எதிர்ப்பிகளின் அளவுகளை நீட்டிக்கவும் மற்றும் அவற்றின் திறனை அதிகரிக்கவும் தேர்ந்தெடுத்த உயிர்ப்பொருட்களின் அடிப்படையிலான செய்முறையில் அமைந்தவை.[36] ஒரு-முறை அற்புத குணப்படுத்தி எனப் பயன்படும் பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குத் தற்போது நுண்மங்கள் மிகுந்த எதிர்ப்புத்திறனைக் கொண்டிருக்கின்றன என்பதால் அவற்றின் திறன் குறைந்துள்ளது.[37] மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தமக்குள்ளாகவே நுண்மங்களின் தொகுப்பிற்கான எதிர்ப்பை வளர்க்க உதவும் தேர்ந்தெடுத்த அழுத்திகளாகச் செயல்படுகின்றன என்பதோடு சந்தேகத்திற்குரிய நுண்மங்களையும் தடுக்கின்றன.[38] 1943ஆம் ஆண்டு நிகழ்ந்த லூரியா-டெல்புருக் பரிசோதனை , நுண்மங்களின் தொகுப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு நிலைமாற்றத்தினை நிரூபித்தது.[39] நுண்மங்கள் நீடித்திருத்தல் திறனுள்ள தடுப்பினால் ஏற்படுகிறது.[40] எந்த ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பும் உயிரியல் செலவினத்திற்குக் காரணமாகலாம். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு நுண்மங்களின் பரவலானது, இத்தகைய தடுப்போடு தொடர்புற்ற குறைச் செயற்பாட்டின் இடையூறுக்கு ஆளாகலாம், இது நுண்ணுயிர் எதிர்ப்பி இல்லாதபோது நுண்மங்கள் நீடித்திருப்பதற்கான தீமைகளை நிரூபிக்கிறது.[41] நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பில் இத்தகைய உள்ளுறையும் மூலக்கூறு இயக்கவியல்கள் மாறுபடலாம். இயல்பான தடுப்பு நுண்மங்களின் மரபார்ந்த உருவாக்கத்தின் விளைவாக இவை இயல்பாகவே ஏற்படலாம்.[42] நுண்ணுயிர் எதிர்ப்பி இலக்காகக் கொள்ளும் புரதத்தை இலக்காக்கிக் கொள்வதில் நுண்ம உயிரணுக்கள் தோல்வியுறலாம். இத்தகைய தடுப்புக்கள் நுண்ம உயிரணுவில் ஏற்படும் நிலைமாற்றம் அல்லது கூடுதல்-உயிரணுக்கள் மற்றும் மரபணு பெறுதல் ஆகியவற்றினால் ஏற்படுகிறது.[42] இவை, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தயாரிப்பில், நுண்ம எதிர்ப்பி தடுப்பு அழுத்தத்திற்கு ஒத்வையாகவும் மற்றும் தடுப்பு இயக்கவியல்களை வளர்ப்பவையாகவும் உள்ளன.[43][44] நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு இயக்கவியல்களின் பரவலானது, மரபணு பரிமாற்றத்தால் முந்தைய தலைமுறைகள் மற்றும் மரபணு மறுகலவையாக்கத்தினால் பெறப்பட்ட நிலைமாற்றங்களின் நெடுகிடையான மாற்றீட்டின் மூலமாக ஏற்படுகின்றன.[40] நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு, பலதரப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான துணைத் தடுப்புக்களில் ஏற்படக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பை இலக்காக்கும் மரபணுக்களை பரிமாறிக்கொள்கிறது.[40][45] இவற்றுடன் தொடர்புறாத நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வேறுபட்ட மரபணுக்களைச் சுமந்திருக்கின்றன. பல்வேறு நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பிகளிலும் பிளாஸ்மிட் அணுக்கள் காணப்படுகின்றன.[45] மாறாக, நுண்மங்களுக்குள்ளாக மற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான குறுக்குவெட்டு-தடுப்பு என்பது, ஒரே தடுப்பு இயக்கவியலானது ஒன்றுக்கும் மேற்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குப் பொறுப்பேற்பதால் ஏற்படுகிறது.[45] நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு![]()
நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பியை முறையற்றும், அதிக அளவிலும் பயன்படுத்துவது, தடுப்பு நுண்மங்கள் உருவாவதன் காரணிக்கு பங்களிப்பதாக அமையும். தகுதிவாய்ந்த மருத்துவவியலாளரின் வழிகாட்டுதல்கள் அன்றி தனி நபர்கள் தாமாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொள்வதனால் இப்பிரச்சினைகள் மேலும் மோசமடைகின்றன. மனித சிகிச்சைக்குத் தேவையற்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விவசாய வளர்ச்சி மேம்படுத்திகளாகப் பயன்படுகின்றன.[47] சில நேரங்களில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவற்றின் பயன்பாட்டிற்கான உத்திரவாதமற்ற நிலையிலும் அறிகுறிகளுக்கென்று தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. சிகிச்சையின்றி தீர்வளிக்கக் கூடிய தொற்றுக்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன.[25][47] ஒருமுறை-அற்புத குணவூக்கிகளான பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு 1950ஆம் ஆண்டுகள் துவங்கி நுண்ணுயிர்த் தடுப்போடு தொடர்புற்றுள்ளது.[37][48] மருத்துவமனைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு பலதரப்பட்ட-நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பு நுண்மங்கள் அதிகரிப்பதோடு தொடர்புறுகிறது.[48] நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு (எடுத்துக் காட்டாக பயணத்தின்போது தொற்றுக்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள பயணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பியை மிகையாக பயன்படுத்துவது மற்றும் மருத்துவர்கள் தமது பரிந்துரைப்பில் நோயாளியின் எடை விபரத்தை நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பயன்படுத்தும் முன்னர் கணக்கில் எடுத்துக்கொள்ளக் தவறுவது ஆகியவை) நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான பரிந்துரைப்பின் திறனைக் கடுமையாக பாதிக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு என்பது பரிந்துரைக்கப்பட்ட அளவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை முழுமையாக எடுத்துக்கொள்ளத் தவறுதல், சரியான தினசரி இடைவெளியில் துல்லியமான முறையில் பரிந்துரைக்க தவறுதல் அல்லது சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறுதல் அல்லது தொற்று ஏற்பட்டுள்ள உறுப்புக்கள் குணம் அடையப் போதுமான அளவு ஓய்வளிக்கத் தவறுதல் ஆகியவற்றையும் உள்ளிடும். இத்தகையவை அனைத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பியின் தடுப்பினால் நுண்மத் தொகுப்பின் வளர்ச்சிக்கு ஏதுவாகலாம். உரிய முறையில் அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பியின் தவறான பயன்பாட்டின் மற்றொரு வடிவமாகும். நச்சுயிரித் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைத்தலும் அவற்றைப் பயன்படுத்துதலும் ஒரு பொதுவான உதாரணம், இது சாதாரண ஜலதோஷம் போன்றவற்றில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. சுவாச உறுப்பு தொற்று குறித்த ஒரு ஆய்வு, அத்தொற்று தமக்கு இருப்பதாக நம்பும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரி்ந்துரைப்பபதாக அறிவிக்கிறது. இருப்பினும் அம்மருத்துவர்கள் அத்தகைய நோயாளிகளுள் நால்வரில் ஒருவரை மட்டுமே சரியாக நோய் கண்டறிகின்றனர் என்றும் அது உரைக்கிறது.[49] மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் சார்ந்த வேறு பல காரணிகளும் மற்றும் அவற்றின் குறுக்கீடுகளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உரிய முறையில் அல்லாது பரிந்துரைப்பதின் காரணமாக இருக்கலாம்.[50] சுவாச உறுப்பு தொற்றிற்கான தொடர்ச்சியான தீர்வை கண்டுபிடிக்கும் சமயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை 48 மணிநேரங்களுக்கு தாமதிக்கச் செய்வது நுண்ணுயிர் எதிர்ப்பியின் பயன்பாட்டைக் குறைக்கும். இருப்பினும் இந்த உத்தியானது நோயாளியின் திருப்தியைக் குறைத்துவிடலாம்.[51] நுண்ணுயிர் எதிர்ப்புத் தடுப்பு குறித்து பரிசீலனை செய்யும் சில நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பபட்ட காலநிலையை மேம்படுத்துமாறு பரிந்துரைக்கின்றன.[47] அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ), மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனங்கள் (என்டிஹெச்) மற்றும் சில உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவை, நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு குறித்த அமெரிக்க உள்முகமை வேலைக்குழு அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் மிகையான பயன்பாடு குறித்த பிரச்சினைகளைக் கையாளுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் அவற்றின் பிரச்சினைகளை செயல்பாட்டு ரீதியாக அறிவிக்கும் நோக்கம் கொண்டுள்ளன.[52] கீப் ஆண்டிபயாடிக்ஸ் ஒர்க்கிங் என்பது ஒரு என்ஜிஓ பிரச்சாரக் குழு.[53] பிரான்ஸில், 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு "நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தானியங்கிகள் அல்ல" என்ற அரசு பிரச்சாரம் நுண்ணுயிர் எதிர்ப்பி பரிந்துரைப்புகளை குறிப்பாக குழந்தைகளிடத்தில் தேவையில்லாமல் செய்யப்படுவதை குறிப்பிட்ட அளவிற்கு குறைத்திருக்கிறது.[54] பிரிட்டனில், 'துரதிருஷ்டவசமாக எந்த அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் உங்கள் ஜலதோஷத்தை நீக்குவதில்லை' என்பதைக் குறிப்பிடும் என்ஹெச்எஸ் சுவரொட்டிகள் மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. பல நோயாளிகளும், நச்சுயிரித் தொற்றை குணப்படுத்த உதவும் என்று நம்புவதால், தங்கள் மருத்துவரிடமிருந்து முறையற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கேட்டுப்பெறுகின்றனர். விவசாயத்தில் வளர்ச்சி மேம்படுத்திகளாக, சிகிச்சைக்காக அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 70 சதவிகிதத்ததிற்கும் அதிகமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நோயில்லாத நிலையில் விலங்குகளுக்கு (எ.கா.கோழிகள், பன்றிகள் மற்றும் ஆடுகள்) உணவாகத் தரப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.[55] விலங்கு உணவு தயாரிப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பயன்படுத்துவது சல்மோனல்லா எஸ்பிபி. கேம்பிலோபேக்டர் எஸ்பிபி., எஷிரிச்சியா கோலி , மற்றும் எண்டரோகோகஸ் எஸ்பிபி. உள்ளிட்ட நுண்மங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்போடு தொடர்புற்றுள்ளன.[56][57] சில அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டுள்ள முடிவுகள், இத்தகைய நுண்மத் தடுப்புக்கள், பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்வினையாற்றாது மனிதர்களிடத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தக் காரணமாகின்றன என்று குறிப்பிட்டுள்ளன. இத்தகைய நடைமுறைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பிரச்சினைகளின் எதிர்விளைவாக சில நிறுவனங்கள் (எ.கா.தி அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மைக்ரோபயாலஜி (ஏஎஸ்எம்)), அமெரிக்கன் பப்ளிக் ஹெல்த் அசோஸியேஷன் (ஏபிஹெச்ஏ) மற்றும் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் (ஏஎம்ஏ) ஆகியவை விலங்கு உணவு தயாரிப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினைத் தடுத்தல் மற்றும் சிகிச்சைக்கு அல்லாத பயன்பாடுகள் ஆகிய அனைத்தையும் நிறுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளன.[சான்று தேவை] இருப்பினும், பொதுவாகவே, நுண்ணுயிர் எதிர்ப்பிகளி்ன் பயன்பாட்டை வரம்பிற்கு உட்படுத்துவதற்கான நெறிமுறை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தாமதமாகின்றன. அமெரிக்க விலங்கு உணவு தயாரிப்பில் சிகிச்சைக்காக அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு உள்நாட்டு மசோதாக்கள் (S.742[58] மற்றும் H.R. 2562[59]) முன்மொழியப்பட்டுள்ளன. ஆயினும், அவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.[58][59] இந்த மசோதாக்களுக்கு தி அமெரிக்கன் ஹோலிஸ்டிக் நர்ஸஸ் அசோஸியேஷன், தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் மற்றும் தி அமெரிக்கன் பப்ளிக் ஹெல்த் அசோஸியேஷன் (ஏபிஹெச்ஏ) உள்ளிட்ட பொதுச் சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.[60] ஐரோப்பிய ஒன்றியம் 2003ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி மேம்படுத்திகளாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.[61] நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் அப்பால்: நுண்மம் அல்லாத தொற்றுக்களுக்கு சிகிச்சையளித்தல்நுண்மத் தொற்றுக்களை பாதுகாப்பான முறையில் குணப்படுத்தும் உட்பொருட்களை அடையாளம் காண்பதானது, எளிய பூஞ்சை மற்றும் நச்சுயிரித் தொற்றுக்களின் சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில், சிக்கலானவை. உயிர் வேதியியலில் பெரும் முன்னேற்றங்களுக்கு வழியமைத்துள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி ஆராய்ச்சிகள் நுண்ம உயிரணு மற்றும் அவற்றின் மூலக்கூறு மற்றும் பாலூட்டிகளின் உயிரணுக்களுக்கு இடையிலுள்ள பெரும் வேறுபாடுகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளன. நுண்ம நச்சுத்தன்மை கொண்டுள்ள பல உட்பொருட்கள், மனித உயிரணுக்களில் அத்தகைய நச்சுத்தன்மை அற்றவையாக உள்ளன என்று இவை விளக்குகின்றன. இதற்கு முரணாக, பூஞ்சை உயிரணு மற்றும் பாலூட்டிகளின் உயிரணு அடிப்படைகளில் உயிர் வேதிமங்கள் மிகப் பொதுவானவையாக உள்ளன. இது பாலூட்டிகளின் உயிரணுக்களைப் பாதிக்காது, பூஞ்சை உயிரணுக்களை பாதிக்கும் சிகிச்சைப்பூர்வமான உட்பொருட்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டைத் தடைசெய்வதாக உள்ளது. இதைப் போன்ற பிரச்சினைகள் நச்சுயிரி நோய்களுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சைகளிலும் இருந்து வருகின்றன. இவை தொடர்பான கட்டுரைகளுக்குக் காண்க: பூஞ்சையாக்கம், பூஞ்சை-எதிர் மருந்து மற்றும் நச்சுயிரி-எதிர் மருந்து. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் அப்பால்: பலமருந்துக் கூட்டின் தடுப்பு உயிரியப் பொருட்கள்பலமருந்துக் கூட்டின் தடுப்பு உயிரியப் பொருட்கள் (Multi Drug Resistant Organism) என்பவை, பொதுவாக வழமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மருத்துவ அளவுகளால் பாதிக்கப்படாத நுண்மங்களை - குறிப்பாக அண்மைக் காலம் வரையிலும் அவற்றிற்குச் சிகிச்சையளிக்க பயன்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை- குறிப்பிடுகின்றன. இத்தகைய உயிர்ப்பொருட்களின் வளர்ச்சியானது, மாற்று எதிர்-நுண்ம சிகிச்சைகளுக்கான தேவையை உருவாக்கி உள்ளது. நுண்மங்களைத் தாக்குவதற்கான குறிப்பிட்ட நச்சுயிரிகளின்[62] பயன்பாடான விழுங்கல் சிகிச்சை (phage therapy) அமெரிக்கா மற்றும் மேற்கத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 1920 மற்றும் 1930ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இவை, நுண்மச் சூழலியலின் ஒரு பகுதியாக உள்ளன. மேலும், குடல் மற்றும் பிற நுண்ணியிர்சார் சூழ்நிலைகளில் குறிப்பிடத் தக்க அளவில், அவற்றின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன.[63]. இத்தகைய சிகிச்சைகளின் வெற்றி பெருமளவிற்கு சிறிய குறிப்புகளாகவே உள்ளன. மூலப்பதிப்புகள் பொதுவாக அணுக்கமற்று உள்ளன. 1940ஆம் ஆண்டுகளில் பென்சிலினின் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டிற்கான சிகிச்சை உத்திகளை மாற்றிக்கொண்டன. இருப்பினும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜார்ஜியா குடியரசில் உள்ள இலியாவா இண்ஸ்டியூட் ஆஃப் பாக்டீரியோபேஜ், நுண்ம மற்றும் நச்சுயிரி முறை சிகிச்சையின் பயன்பாட்டினைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இண்ட்ராலைடிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அறக்கட்டளைகள் தற்போது இத்தகைய சிகிச்சைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றன. [சான்று தேவை][64] இருப்பினும், நச்சுயிரிகளின் மரபணுக் கட்டமைப்புக் குறித்த அக்கறையானது, இத்தகைய சிகிச்சையின் நோக்கங்களை வரம்பிற்கு உட்படுத்தியுள்ளது.[65][66] நுண்மங்கள் மற்றும் அவை சார்ந்த சிகிச்சைகள் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பின் நோக்கங்களை தீர்ப்பதற்கான சாத்தியத்தை வழங்குகின்ற அதே நேரத்தில் மருத்துவத்தில் அவற்றிற்கான இடம் இன்னும் கேள்விக்குறியதாகவே உள்ளது.[சான்று தேவை] ஊடகம்:Example.ogg பாக்டீரியோசின் என்னும் மருந்து வழமையான சிறிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு மாற்றாக வளர்ந்துவருகிறது.[67]. பாக்டீரியோசின் மருந்தின் பல்வேறு வகைகள் சிகிச்சைப்பூர்வமான துணைப்பொருட்களாக வெவ்வேறு சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. சிறிய மூலக்கூறு பாக்டீரியோசின்கள் (உதாரணத்திற்கு மைக்ரோசின் மற்றும் லாண்டிபயாடிக்) வழக்கமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஒத்தவையாக இருக்கலாம். கோலிஸின் போன்ற பாக்டீரியோசின்கள் மிகவும் குறுகலான-பிரிவுப்பகுப்பாக இருக்கின்றன மற்றும் சிகிச்சைக்கு முந்தைய புதிய மூலக்கூறு அறுதியிடலைக் கோருகின்றன. பெரிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பாதகமான ஒரு விடயம் அவை, சவ்வுகளை கடப்பது மற்றும் உடல் முழுவதும் படிப்படியாக பயணிப்பது ஆகியவற்றில் சிக்கலைக் கொண்டிருப்பதேயாகும். இதனால், அவை வெளிப்புற அல்லது குடல்வழிப் பயன்பாட்டினையே பெரும்பாலும் கொண்டுள்ளன.[68]. இவை அமினோ அமிலங்கள் நிறைந்த புரதக் கூறுகளானதால், சிறிய மூலக்கூறுகளைக் காட்டிலும் நுணுக்கமான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.[69]. ஊட்டச்சத்து திரும்பப்பெறுதல் என்பதானது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்றியமைத்தல் அல்லது அவற்றைக் கூடுதலாக அளிப்பதற்கான சாத்தியமுள்ள ஒரு உத்தியாகும். இரும்புச்சத்து கிடைக்கப்பெறுவதனால் நுண்மங்கள் பெருக்கதிற்கு மனித உடல் வரம்பிட இயலும்.[70]. உடலிலிருந்து இரும்புச்சத்தை விடுவிப்பதற்கான இயக்கவியல் (நச்சுப்பொருட்கள் மற்றும் சைடெரோபோர்ஸ் போன்றவை) நோய் விளைக்கும் கிருமிகளுக்குப் பொதுவானதாகும். குறிப்புதவிகள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia