நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நெட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.மூலவர் அப்புரானந்த சுவாமிகள், சுப்ரமணிய சுவாமி. அப்புரானந்தர் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் அடுத்த பட்டினமருதூரில் இல்லத்துப் பிள்ளைமார் குடும்பத்தில் பிறந்தார். பிற்காலத்தில் கடல் சீற்றத்தால் இவர் பிறந்த இடத்தில் இருந்த குடியிருப்புகள் சேதமடைந்தன. இன்றளவும் அவ்விடத்தில் இவர்கள் வழிபட்ட விநாயகர் கோவிலும் தந்தை வழி குலதெய்வமான ஆரியப்பெருமாள் சாஸ்தா கோவிலும் உள்ளன. இவரது இளமைக்காலத்தில் ஆன்மீக நாட்டம் ஏற்பட்டு துறவரம் மேற்கொள்ள எண்ணி ஆலங்குளம் தாலுகா நெட்டூரில் தவ வாழ்வு வாழ்ந்து வந்தார். சகோதரியின் வற்புறுத்தலின் பெயரில் இருளகற்றி என்பவரை மணந்தார். மணவாழ்வின் பயனாய் இவருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். பின்பொருநாள் தன் சிந்தனையில் தோன்றிய கட்டளையின் படி ஜீவ சமாதி அடைந்தார். இந்த ஜீவ சமாதி மேல் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் நான்கு கால பூஜைகள் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாய பூஜாரிகளால் செய்யப்பட்டு வருகின்றது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் சுப்பிரமணியசுவாமி- அப்ரானந்தசுவாமி, வள்ளி-தெய்வானை சன்னதிகளும், விநாயகர், தட்ஷிணைமூர்த்தி, சாஸ்தா, நாகர், பாலமுருகன், இருளகற்றி அம்பாள், முப்பிடாதியம்மன், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நவக்கிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் வைகாசிவிசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆனி மாதம் ஆனிதிருவிழா திருவிழாவாக நடைபெறுகிறது. இங்குள்ள பூஜாரிகளுக்கு கோவிலின் ஆதிகாலத்தில் இருந்து மாத ஊதியமாக ஒரு மூட்டை நெல் வழங்கப்படுகிறது. அந்த நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியை நெய்வேத்யத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இது அங்குள்ள பூஜாரிகள் சொல்லிக் கிடைத்த தகவல் மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia