நெருப்பை விரும்பும் செடி
![]() பாங்க்சியா கிராண்டிஸ் (Banksia grandis), என்பது பொதுவாக புல் பாங்க்சியா[2] அல்லது ஜியண்ட் பாங்க்சியா,[3] என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பொதுவான மற்றும் தனித்த மேற்று மற்றும் தென்மேற்கு ஆத்திரேலியாவில் காணப்படும் ஒரு வகைத் தாரவமாகும்.. நூங்கார் மக்கள் இத்தாவரத்தை பீரா, பியாரா, பூங்குரா, குவாஞ்சியா, பிரா என்ற பெயர்களால் அழைக்கின்றனர்.[4] இத்தாவரம் நெருப்பை எதிர்க்கும் தன்மை கொண்ட முக்கியத்தண்டு மற்றும் தடிமனான பட்டையையும் கொண்டுள்ளது. இதன் இலைகள் முக்கோண வடிவ பக்க மடல்களைக் கொண்டவை. இதன் பூக்கள் வெளிர் மஞ்சள் நிற பெரிய நீள் வட்டக்கூம்பு வடிவமானவை. செடியின் அமைவுஇம்மரம் 10 முதல் 30 அடி உயரம் வளரக்கூடியது. இதில் நெருக்கமாக பல கிளைகள் உண்டு. இதனுடைய இலைகள் மிகவும் விசித்திரமானது. ஒரு அடி நீளம் மட்டுமே உள்ளது. இதனுடைய விளிம்பு பற்கள் போன்று உள்ளது. இலை பச்சை முதல் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். பூ மிகவும் அழகாக இருக்கும். பூவைச் சுற்றி பூவடிச் செதில் அதிகமாக இருக்கும். பூக்கள் தூகை போல் உள்ளது. [2][5][6][7] இதன் தாயகம் ஆத்திரேலியா ஆகும். சர் ஜோசப் பாங்க்ஸ் என்கிற ஆங்கில விஞ்ஞானியின் பெயர் இம்மரத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 46 வகைகள் உள்ளது. நெருப்பு என்றால் தாவரங்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஆனால் இச்செடியின் விதைகள் வெடித்து சிதறுவதற்கு நெருப்பு மிகவும் அவசியம். வெடித்து சிதறினால் மட்டுமே விதைகள் முளைக்கும். நெருப்பு ஏற்படவில்லை என்றால் இச்செடிகள் செடிகள் முளைப்பது கிடையாது. சிறு புதர்கள் தீப்பிடித்து எரியும் போது ஏற்படும் வெப்பத்தால் கனியின் ஓடு வெடித்து விதையை வெளியே கொட்டுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia