நைனித்தால் படைவீரர் குடியிருப்பு
நைனித்தால் படைவீரர் குடியிருப்பு (Nainital Cantonment') இந்திய மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நைனித்தால் மலைவாசத்தலத்திற்கு அருகில் உள்ளது. 1878ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நைனித்தால் படைவீரர் குடியிருப்பு தற்பொழுது நான்காம் தரநிலை படைவீரர் குடியிருப்பாக உள்ளது.[1] வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக வருண் குமார் பதவியில் உள்ளார். புவியியல்நைனித்தால் படைவீரர் குடியிருப்பு [1] 29°23′N 79°28′E/29.38 °N 79.47 °E என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. மக்கள்தொகை2001 [2] ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நைனித்தால் படைவீரர் குடியிருப்பு நகரம் 1281 பேர் என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் ஆண்கள் 52% ஆகவும், பெண்கள் 48% ஆகவும் இருந்தனர். நைனித்தால் படைவீரர் குடியிருப்பின் சராசரி கல்வியறிவு விகிதம் 82% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 78% ஆகவும் இருந்தது. நைனித்தால் படைவீரர் குடியிருப்பு மக்கள் தொகையில் 8% பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளாவர். மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia