பட்டானி குண்டுவெடிப்பு 2017
தாய்லாந்து நாட்டின் பட்டானி நகரில் மே 9, 2017 அன்று பெருங்கடையில் (Supermarket) நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 80 பேர் காயமடைந்தனர். காயமடைந்த சிலருக்கு உடனடி மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. அதிக அளவு காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.[1][2][3][4][5] தாக்குதல்உள்ளூர் நேரப்படி பிறபகல் 02:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல் குண்டு வெடித்த 10 நிமிட இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது குண்டு வெடித்தது. 1 ஆகஸ்ட் 2005 மற்றும் 11 மார்ச்சு 2012 ஆகிய நாட்களில் முன்னரே இப்பெருங்கடையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. 100 கிலோகிராம் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் மற்றும் பெட்ரோல் ஆகியன இக்குண்டு வெடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டன.[6] சந்தேக தாக்குதல்தாரிகள்இக்குண்டுவெடிப்பிற்காக இஸ்லாமிய பிரிவினைவாதிகள் சந்தேகிக்கப்படுகின்றனர். ஆறு நபர்களைக் கொண்ட மூன்று குழுக்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என தாய்லாந்து காவல்துறையினர் நம்புகின்றனர்.[7] இதைத் தொடர்ந்து மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia