பிசப் பன்னாட்டு விமானநிலைய நிகழ்வு, 2017
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பிசப் பன்னாட்டு விமானநிலையத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். 21 ஜூன் 2017 அன்று விமான நிலையத்தின் இரண்டாவது தளத்தில் முற்பகல் 9:45 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வின் காரணமாக அவ்விமான நிலையத்தின் பயணிகள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.[1] கத்தியால் குத்தப்பட்ட அதிகாரியின் உடல் நிலை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.[2] விமான நிலையத்திலிருந்த பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.[3] தாக்குதல்தாரிஅமோர் தெளகி (Amor Ftouhi) எனும் தாக்குதல்தாரி இத்தாக்குதலை நடத்தியவராவார். அல்லாஹூ அக்பர் எனக் கூக்குரலிட்டு தாக்குதல் நடத்தினார்.[4] இவர் துனீசியா நாட்டைச் சார்ந்தவர். கனேடிய கடவுச் சீட்டைக் கொண்டுள்ள மொண்ட்ரியால் நகரவாசியாவார்.[5] புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia