பிரசவத்திற்கு பிந்தைய மனச்சோர்வு முன்பயம், இருமுனைய பிறழ்வு, மனச்சோர்வு குறித்த குடும்ப வரலாறு, உளவியம் மன அழுத்தம், மகப்பேறு சிக்கல்கள், ஆதவின்மை, பயன்படும் மருந்துகள் பிறழ்வு[1]
பின் மகப்பேற்று இறுக்கம்(Postpartum depression) என்பது பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குழந்தை பிறத்தலுடன் தொடர்புடைய ஒரு வகையான மனநிலை கோளாறை இந்நோய் குறிக்கிறது. இருபாலினத்தவர்களையும் இவ்வகை மனச்சோர்வு நோய் பாதிக்கிறது[1][3]. தீவிர துயரங்கள், உடம்புக் களைப்பு, கவலை, உணர்ச்சி மேலீட்டால் அழுகை, எரிச்சல், நித்திரையின்மை தூக்கம் அல்லது சாப்பிடும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும் [1]. குறிப்பாக குழந்தை பிறந்து ஒருவாரம் மற்றும் ஒரு மாத காலத்திற்கிடையில் இந்நோயின் தொடக்க கால அறிகுறிகள் தென்படும். புதியதாகப் பிறந்த குழந்தையையும் இந்நோய் பாதிக்கும் [2].
மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் காரணங்களை மிகத்தெளிவாக வரையறுக்க இயலவில்லை. உடல் மற்றும் உணர்ச்சிவசப்படுதல் ஆகிய இரண்டு காரணிகளின் இணைப்பால் ஏற்படும் பாதிப்பு இதற்கான காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது[1]. தூக்கமின்மையும் இயக்குநீர் மாற்றங்களையும் கூட இக்காரணிகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்[1]. மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு முன்பாக எதிர்கொண்ட சிக்கல்கள், இருமுனையப் பிறழ்வு, மனச்சோர்வின் குடும்பபின்னணி, மன அழுத்தம், குழந்தை பிறப்புச் சிக்கல்கள், ஆதரவின்மை, மருந்துப் பயன்பாட்டு பிறழ்வுகள் போன்ற சிக்கல்களும் இந்நோயின் அபாயக் காரணிகளில் அடங்குகின்றன. [1]. சிகிச்சையைப் பொறுத்தவரை நபர் கூறும் அறிகுறிகளைக் கொண்டுதான் நோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது [2]. பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கவலையாகவும் மகிழ்ச்சியற்ற மனநிலையிலும் காணப்பட்டால் அவர்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கலாம். அறிகுறிகள் கடுமையாகவும் இரண்டு வாரங்கள் தாண்டிய பிறகும் கூட நீடிக்கலாம் [1].
அபாய நிலையில் உள்ளவர்களின் மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வைத் தடுக்க அவர்களுக்கு உளவியல்ரீதியானசமூக ஆதரவை வழங்குவது பாதுகாப்பாக இருக்கும் [4] எனக்கருதப்படுகிறது.. ஆலோசனை வழங்குதல் அல்லது மருந்துகள் கொடுத்தல் மட்டுமே இம்மனச்சோர்வுக்கான சிகிச்சை முறையாகும் [2]. தனிப்பட்டவர்களுக்கு இடையேயான உளவியல் சிகிச்சை, அறிவுசார் நடத்தை சிகிச்சை, மனோயியக்கமுறை சிகிச்சை உள்ளிட்டவை ஆலோசனை வழங்குதலின் வகைகளாகும் [2]. தெரிவுசெய்யப்பட்ட செரோடோனின் உயர்வு தடுப்பிகள் என்னும் மனச்சோர்வு நீக்கும் மருந்துகள் இந்நோய்க்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றன எனக் கூறப்படுகிறது [2].
குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களில் 15% பெண்கள் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் [1][2]. மேலும் இம்மனநிலை பாதிப்பு 1% முதல் 26% வரையிலான புதிய தந்தைகளுக்கும் ஏற்படுகிறது [3]. 1000 பெண்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் இந்நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் [5]. ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் இம்மனச்சோர்வு நோய் முன்னணியில் நிற்கிறது. அமெரிக்காவில் ஒரு இலட்சம் குழந்தைகளில் 8 குழந்தைகள் இம்மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் கொல்லப்படுகிறார்கள் [6].
அறிகுறிகள்
மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் அறிகுறிகள் மகப்பேற்றுக்குப் பின்னரான முதல் ஆண்டின் எந்தவொரு நேரத்திலும் ஏற்படலாம்[7]. மகப்பேற்றுக்குப் பின்னர் குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே பின் மகப்பேற்று இறுக்கம் நோயாக அந்நோய் அடையாளம் காணப்படுகிறது [8].ஆனால் இவை மட்டுமே அந்நோயை உறுதிபடுத்துவதில்லை.
உணர்வு சார்ந்தவை
தொடர்ச்சியான சோகம், கவலை அல்லது "வெற்று" மனநிலை[7],
தன்னைப் பற்றிய, குழந்தையைப் பற்றியம் கணவரைப் பற்றிய கவலைகள்[8][9]
நோய்த் தொடக்கமும் நீட்டிப்பும்
மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு பொதுவாக குழந்தை பிறப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்குகிறது [11].
நகரத்தின் உட்புற மனநல மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைப்பிறப்புக்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் 50% பேருக்கு பேறு காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன [12].
பின் மகப்பேற்று இறுக்கம் என்பது பிறப்புக்காலத் தொடக்கத்துடன் கூடிய மன தளர்ச்சி சீர்குலைவு என மனநோய்களைக் கண்டறியும் புள்ளிவிவரக் கையேடு-5 வகைப்படுத்துகிறது. பிறப்புக் காலம் என்பது கருவுற்ற காலத்தில் எந்த நேரத்தையும் அல்லது பிரசவத்திற்குப் பிறகான நான்கு வாரங்களுக்குள் தொடங்கும் எனவும் அது வரையறுக்கிறது. பின் மகப்பேற்று இறுக்கம் நோய் பல மாதங்களுக்கு ஏன் ஓர் ஆண்டு வரை கூட நீடிக்கலாம் [13]. கருச்சிதைவு அடைந்த பெண்களுக்கும் கூட இம்மனச்சோர்வு நோய் பாதிப்பு ஏற்படுகிறது [14] தந்தையர்கள்களும் கூட மகப்பேற்றுக்குப் பின்னர் 3-6 மாதங்கள் வரை மிக உயர்ந்த மட்டத்திலான இத்தகைய மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன [15].
தாய் சேய் உறவு
பின் மகப்பேற்று இறுக்கம் நோய் சாதாரண தாய்-சேய் உறவுக்கு குறுக்கீடாக அமையலாம். நீண்டகால குழந்தை வளர்ச்சியை அது கடுமையாகவும் பாதிக்கலாம். மேலும், தாய்மார்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு இணக்கமற்றவர்களாக இருக்கவும் இது வழிவகுக்கும் [16]. குழந்தைகளுக்கான உணவு நடைமுறைகள், தூக்க நடைமுறைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவைகள் இணக்கமற்ற நடவடிக்கைகளில் அடங்கும்[16].
சில அரிய நிகழ்வுகளில் அதாவது 1,000 பெண்களுக்கு 1 முதல் 2 வரையிலான பெண்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு உட்பட்டு மனநோயாளி ஆகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளில் அப்பெண்கள் முன்னதாக மனநோய் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் [17]. இங்கெல்லாம் சிசுக்கொலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இம்மனச்சோர்வு நோயால் 1,00,000 குழந்தைகளுக்கு 8 குழந்தைகள் வீதம் சிசுக்கொலைகள் நிகழ்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன [2].
நோய்க்கான காரணங்கள்
மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கான காரனங்களை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இயக்குநீர் மாற்றங்கள், மரபியல் வழியாக வருவது மற்றும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை சாத்தியமான காரணங்கள் எனக் கருதப்படுகின்றன.
இயக்குநீர் சுரத்தலில் ஏற்படும் மாற்றங்கள் இந்நோய்க்கான காரணத்தில் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஈசுட்ரோசன், புரோகெசுட்ரோன், தைராய்டு இயக்குநீர், டெசுட்டோசிடெரோன், கார்டிக்கோடிரோப்பினை வெளியிடும் இயக்குநீர், கார்டிசோல் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன [18].
ஆழ்ந்த இயக்குநீர் மாற்றங்களைச் சந்திக்காத அப்பாக்களும் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் [19]. இக்காரணம் ஆண்களுக்கு மட்டும் மாறுபட்டதாக இருக்கலாம்.
அளவிடற்கரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக குழந்தைப் பராமரிப்பு தொடர்பான கருதுகோள்களிலும் மாற்றங்கள் பல தோன்றி பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. முன்னதாக பல குழந்தைகளுக்கு தாயான பெண்கள் கூட புதிய குழந்தைக்கு தாயாகும்போது இத்தகைய வாழ்க்கை மாற்ற முறைகளால் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் [20]. கருத்தரிப்புக்கும்ம் மகப்பேறுக்கும் இடையிலான காலத்தில் உயிரியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் கூடவே நிகழ்வதால் பெரும்பாலான பெண்களின் பின் மகப்பேற்று இறுக்கம் நோய் கண்டறியமுடிவதில்லை [21][22].
அபாயக் காரணிகள்
பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கான காரணங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும் அதன் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
↑Paulson, J.F. (2010). "Prenatal and postpartum depression in fathers and its association with maternal depression: A metaanalysis". Journal of the American Medical Association303: 1961–1969.