பிமல் கிருஷ்ண மோதிலால்
கல்விசிறுவயதிலிருந்தே சமசுகிருதத்தில் கல்வியறிவு பெற்ற மோதிலால் கணிதம் மற்றும் தர்க்கவியல் மீதும் ஈர்க்கப்பட்டார். 1957 முதல் 1962 வரை அவர் ஆசிரியராக இருந்த சமஸ்கிருதக் கல்லூரியின் முன்னணி அறிஞர்களால் பாரம்பரிய இந்திய தத்துவ அமைப்பில் பயிற்சி பெற்றார். பண்டிட் தாராநாத் தர்கதீர்த்தா மற்றும் கலிபாதா தர்காச்சார்யா போன்ற அறிஞர்களால் கற்பிக்கப்பட்டார். பண்டிட் அனந்த குமார் நியாதர்கதீர்த்தா, மதுசூதன் நியாயாச்சார்யா மற்றும் விஸ்வபந்து தர்கதீர்த்தா ஆகியோருடனும் அவர் உரையாடினார். 1962 இல் தர்க்கதீர்த்தாவின் (தர்க்கவியலில் முதுகலைஞர்) உபாதி (பட்டம்) அவருக்கு வழங்கப்பட்டது. 1957 மற்றும் 1962 க்கு இடையில் சமசுகிருதக் கல்லூரியில் (கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி) கற்பித்தபோது, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் இந்தியவியலாளரான டேனியல் இங்கல்ஸ் என்பவருடன் மோதிலாலுக்கு தொடர்பு ஏற்பட்டது, அவர் அங்கு முனைவர் பட்ட ஆய்வில் சேர ஊக்குவித்தார். மோதிலால் ஃபுல்பிரைட் கல்வி உதவித்தொகையைப் பெற்றார் மற்றும் 1962 மற்றும் 1965 க்கு இடையில் நவ்யா-நியாயா மறுப்பு கோட்பாட்டின் மீது இங்கால்சின் கீழ் தனது முனைவர் பட்டத்தை முடித்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் வில்லார்ட் வான் ஓர்மன் குயினிடமும் படித்தார். பின்னர், அவர் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் சமசுகிருதப் பேராசிரியராக இருந்தார், மேலும் 1977 ஆம் ஆண்டில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ராபர்ட் சார்லஸ் ஜேனர் ஆகியோருக்குப் பிறகு ஆக்சுபோர்டில் ஸ்பால்டிங் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறப்புமோதிலால் புற்றுநோயால் 1991 ஜூன் 8 அன்று இறந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia