புக்குசிமா அணுவுலைப் பேரழிவு
ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு என்பது ஜப்பான் கடல் பகுதியில் 11 மார்ச் 2011 அன்று ஏற்பட்ட சுனாமியால் ஃபுகுசிமா அணு உலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதைக் குறிக்கும். இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கூறினர். விபத்துஇந்த உலை சுனாமியால் பாதிக்கப்பட்ட போது, தொழிலாளர் சம்பளம் 20 சதவீதம் தரப்படவில்லை, 1,800 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1,973 பேருக்கு தைராய்டு கதிர்வீச்சின் விளைவாகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மீட்பு நடவடிக்கைஉலக அணுசக்தி வரலாற்றிலேயே இதுவரை செய்யப்படாத ஒரு மீட்புப் பணி, ஜப்பானில் சிதைந்து கிடக்கும் ஃபுகுஷிமா அணு உலையில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அணு உலை வளாகத்தில் நான்காம் உலையில் எரிபொருள் குச்சிகள் இன்னமும் மேற்கூரை இல்லாமல், செயல்படும் படி உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நீரை விட்டு வெளியே குச்சிகள் எடுக்கப்பட்டால் காற்றில் பட்டதும் தீப்பிடிக்கக் கூடியவை, இது பெரும் கதிர்வீச்சை சீனா முதல் மேற்கு அமெரிக்கா வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 15 அடி நீளத்தில், 30 கிலோ எடை கொண்ட 1,331 குச்சிகள் இங்கு தண்ணீருக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலையின் உரிமையாளர்கள் ‘டெப்கோ’ என்ற நிறுவனத்தினராவர் நவம்பர் மாதம் மீட்பு பணியை செய்ய உள்ளனர். ![]() அணு உலை வளாகத்தை சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் ஆகும். இதற்கான செலவு 11 பில்லியன் டாலர்கள் தேவைப்படும்.[3] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia