புதூர் மாரியம்மன் கோயில்![]() புதூர் மாரியம்மன் கோயில் என்பது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதூரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] அமைவிடம்திருவண்ணாமலையின் மேற்கிலும், ஜவ்வாது மலை கிழக்கிலும், செங்கத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் போளூர் செல்லும் சாலையில் புதூர் செங்கம் எனும் ஊரில் பீமநதிக்கரையில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் சங்க கால மன்னன் நன்னன் சேய் நன்னனால் வழிபடப் பெற்றது. இக்கோயிலுக்குச் செல்ல திருவண்ணாமலையில் இருந்தும் செங்கத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. தலச் சிறப்புபக்தர்கள் தங்கள் குறைகள் நிவர்த்தி அடைய வேண்டி அம்மனின் திருமேனிக்கு எண்ணெய் அபிசேகம் செய்கின்றனர். இந்த எண்ணெயை வாங்கி கண்களில் தேய்த்தால் குறைபாடு உடைய கண்கள் குணமடைகின்றன என நம்புகின்றனர். கோயில் திறந்திருக்கும் நேரம்காலை 6.30மணி முதல் 1.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை செவ்வாய் வெள்ளி ஞாயிறு காலை 6.30 மணி முதல் மாலை7.00 வரை ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia