புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயில்
சீனிவாச பெருமாள் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் புறநகர்ப் பகுதியில்[1][2][3][4] அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இந்தக் கோயிலானது, 13°04′55″N 80°15′03″E / 13.081875°N 80.250920°E (அதாவது, 13°04'54.8"N, 80°15'03.3"E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[5] 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இக்கோயிலின் கும்பாபிசேகம் நடைபெற்றது.[6] 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கோயிலில் இலட்சார்ச்சனை நடைபெற்றது.[7] சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்த பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் வரைவுப் பட்டியலில் புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia