பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில்பூதலிங்கசுவாமி கோயில் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டியில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1] இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து வடக்கே 10 கி.மீ தொலைவில் பழையாற்றின் மேற்குக் கரையில் தாடகை மலையின் அடிவாரத்தில் உள்ளது. இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. [1] சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்கின்றனர். [1] சந்நிதிகள்இக்கோயிலில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் சிவகாமியம்மை. உள்பிரகாரத்தில் விநாயகர், முருகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் முதலிய சன்னிதிகள் உள்ளன. அமைப்புமூலஸ்தானம் அமைந்துள்ள பாறையைச் சுற்றிலும் எழுப்பட்டிருக்கும் கற்சுவர் ஒரு சிறிய கோட்டையின் தோற்றத்தை கொண்டிருக்கும். கோயிலின் வடக்கே திருக்குளம் உள்ளது. இவ்வாலயத்திற்கு விமானம் இல்லை. செட்டி மண்டபத்தில் இரு துவாரகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விழாக்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia