பெண்குறியை நாவால் தூண்டல்![]() பெண்ணுறுப்பைத் தூண்டுதல் என்பது வாய்வழிப் பாலுறவின் ஒரு வகையாகும். ஒரு ஆள், பெண்குறிக் காம்பையோ, பெண்குறியின் பிற இடங்களிலோ, யோனியிலோ வாய்வைத்து பெண்ணிடம் பாலுணர்வை தூண்டமுடியும்.[1][2] பெண்ணின் உடலில் பாலுணர்வை அதிகம் உணரக் கூடிய உறுப்பு பெண்ணுறுப்பின் வெளிப்பகுதியான கிளிடோரிசு ஆகும். இதைத் தூண்டுவதன் மூலம் பெண்ணுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும்.[3][4][5] பெண்ணுறுப்பைத் தூண்டி காம இன்பத்தை அடையச் செய்து, பாலுறவில் ஈடுபட்டு, பின்னர் புணரக் கூடும்.[1][6] பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை தூண்டி இன்பமடைவதும் உண்டு.[1][2] பெண்ணுறுப்பை வாய்வழியாக தூண்டுவதால் பால்வினை நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.[7][8][9] வாய்வழிப் புணர்ச்சியை தவறான நடைமுறையாக கருதுவோர் உண்டு[1] இருப்பினும் பெரும்பாலான நாடுகளில் இந்த செயலுக்கு எதிராக சட்டங்கள் இல்லை.[10][11] வாய்வழிப் புணர்ச்சியைப் பற்றி சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கலாம் என்பதால் அத்தகையோர் இச்செயலில் ஈடுபடுவதில்லை.[1] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia