பேச்சு:உருளைக் கிழங்கு குடும்பம்பதிப்புரிமை மீறல் பராமரிப்பு வார்ப்புரு ஏன் நீக்கப்பட்டது?--AntanO 01:30, 11 திசம்பர் 2016 (UTC)
கட்டுரை கட்டற்ற ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது என்று எவ்வாறு மற்றவர்கள் தெரிந்து கொள்வது? --AntanO 06:20, 18 திசம்பர் 2016 (UTC) @Info-farmer: தமிழக அரசு அறிவிப்பு குறித்த உரையாடலைத் தனியே இங்கு தொடர்வோம். அதன் அடிப்படையில் தமிழக அரசு நூல்களின் ஆக்கங்களை இங்கு பயன்படுத்துகிறோம் என்றாலும் பின்வரும் வழிமுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்:
நன்றி.--இரவி (பேச்சு) 11:19, 19 திசம்பர் 2016 (UTC)
கட்டுரை விரிவாக்கக் குறிப்புகள்வேர்இக்குடும்பத்தின் வேரானது, கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பாகக் காணப்படுகிறது. தண்டுநிலத்தின் மேல் காணப்படும். வளர்ந்த முட்களையுடைய தண்டினைப் பெற்றிருக்கிறது. (எ.கா. 'சொலானம் சாந்தோகார்ப்பம்' (கண்டங்கத்திரி) தண்டு உருளை வடிவமானது. தண்டு மென்மையானதாகவோ கட்டைத்தன்மையுடையதாகவோ காணப்படுகிறது. மேலும் அவை கிளைகளையுடையதாகவும், தூவிகளையுடையதாகவும் உள்ளன. (எ.கா. 'பெட்டுனியா அயிப்பிரிடா' மற்றும் 'நிக்கோட்டியான அலேட்டா'). 'சொலானம் டியூபரோசம்' தாவரத்தின் தண்டு பகுதியானது, கிழங்காக மாற்றமடைந்து உள்ளது. இலைதனி இலை வகையாகும். இலைக்காம்புடையது. பொதுவாக மாற்றியலையமைவு. சில தாவரங்களில் எதிரிலையமைவு. முழுமையானது (எ.கா. 'பெட்டுனியா ஹைபிரிடா). இலையடிச் செதிலற்றது. ஒரு நடுநரம்புடன் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது. 'சொலானம் சாந்தோகார்ப்பம்' தாவரத்தில் நடுநரம்பும், பக்க நரம்புகளும் மஞ்சள்̈நிற முட்களைக் கொண்டுள்ளன. தனித்த. இலைக்கோண 'சைமோசு' (எ.கா. 'டாட்டூரா சுட்ராமோனியம்') அல்லது கோணம் விலகிய (Extra axillary) 'சுகார்பியாய்டு சைமோஸ்' மஞ்சரியான 'ரைபிடியம்' (Rhipidium)) ஆகும். இது கைவிசிறி போன்ற அமைப்புடையது. (எ.கா. 'சொ. நைக்ரம்' அல்லது 'கேலிக்காய்டு சைமோசு' (எ.கா. 'சொ. டியூபரோசம்') அல்லது 'அம்பெல்லேட் சைமோஸ்' (எ.கா. வைத்தானியா சாம்னிஃபெரா) மலர்கள்பூவடிச் செதிலுடையது (எ.கா. 'பெட்டுனியா அயிபிரிடா') அல்லது பூவடிச் செதிலற்றது எ.கா. 'சொ. நைக்ரம்' (மணத்தக்காளி) பூக்காம்புச் செதிலற்றவை. பூக்காம்புடையது. ஈரடுக்குடையது. ஐந்தங்கமலர். முழுமையானது. ஆரச்சமச்சீருடையது (எ.கா. 'டாட்டூரா சட்ராமோனியம்') அல்லது இருபக்க சமச்சீருடையது (எ.கா. 'சைசான்தசு பின்னேட்டசு'). இருபால் தன்மையுடையது. இதன் மலரானது,சூலக மேல் மலர் வகையைச் சார்த்ததாகும். வட்டங்கள்பூவிதழ் வட்டம் என்பது முக்கியமாக அல்லி வட்டத்தையும். புல்லிவட்டத்தையும் குறிக்கிறது. புல்லி வட்டம்புல்லிகள் மொத்தம் ஐந்து உள்ளன.அவை பசுமையானது. இணைந்த புல்லிகளாக அமைந்துள்ளது. குழல் போன்ற அமைப்புடன் தொடு இதழ் அமைவிலுள்ளன. எ.கா. 'டாட்டூரா மெட்டல்' (ஊமத்தை) அல்லது தழுவு இதழமைவு கொண்டது. (எ.கா. 'பெட்டுனியா அயபிரிடா'). மணி வடிவம் கொண்ட, நிலைத்த புல்லிவட்டத்தையுடையது (எ.கா. 'சொ. மெலாஞ்சினா') அல்லி வட்டம்அல்லிகள் மொத்தம் ஐந்து உள்ளன. அவை இணைந்த அல்லிகளாக உள்ளன. புனல் வடிவம் உடையது. குழல் போன்றது. பொதுவாக 'பிலிக்கேட்' - கைவிசிறியின் மடிந்த இதழ்களைப் போன்றது. இதழமைவு திருகலானது அல்லது தொடு இதழ் அமைவு அல்லது தழுவு இதழமைவு கொண்டது. மகரந்தத்தாள் வட்டம்மகரந்தத்தாள்கள் மொத்தம் ஐந்து உள்ளன. அல்லியை ஒட்டியவை. அல்லி இதழ்களுக்கு இடையே அமைந்தவை. பொதுவாக சமநீளமற்ற, மகரந்தக் கம்பிகளையுடையவை. மகரந்தக்கம்பிகள் அல்லி குழலின் அடிப்பகுதியில் அல்லது நடுப்பகுதியில் ஒட்டிக்காணப்படும். மகரந்தக் கம்பிகள், மகரந்தப்பையின் அடியில் இணைந்தவையாக உள்ளன. மகரந்தப்பைகள், இரு அறையுடையவை. உள்நோக்கி வெடிப்பவை. அடியில் ஒட்டியவை அல்லது முதுகு புறத்தில் ஒட்டியவை. நீளவாக்கில் அல்லது நுனித்துளை வெடிப்பவையாக உள்ளன. (எ.கா. 'சொ. நைக்ரம்'). 'சைசான்தசு பின்னேட்டசு' என்ற தாவரத்தில் இரண்டு மகரந்தத்தாள்கள் வளமானவை மற்ற மூன்று மகரந்தத்தாள்கள் மலட்டு மகரந்தத்தாளாக குறுக்கமடைந்துள்ளன. சூலக வட்டம்
ஊடகங்கள்
பொருளாதாரப் பயன்கள்உணவுத் தாவரங்கள்உலக நாடுகள் அனைத்திலும் 'சொலானம் டியூபரோசம்' (உருளைக் கிழங்கு) பொதுவாக உணவாகப் பயன்படுகிறது. 'சொ. மெலாஞ்சினா (கத்தரி) தாவரத்தின் முதிர்ச்சியடையாத கனியும். 'லைக்கோபெர்சிகான் எசுகுலெம்டம்' (தக்காளி) தாவரத்தின் முதிர்ந்த கனியும் உணவாகப் பயன்படுகின்றன. மருத்துவத் தாவரங்கள்'அட்ரோபா பெல்லடோனா' தாவர வேர்களிலிருந்து ‘அட்ரோஃபின்’ என்ற 'ஆல்கலாய்டு (alkaloid)' பிரித்தெடுக்கப்படுகிறது. இது தசை வலியை நீக்கப் பயன்படுகிறது. 'டாட்டூரா சட்ராமோனியம்' தாவர இலைகள் மற்றும் பூக்களிலிருந்து ‘சட்ராமோனியம்’ என்ற மருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. இது ஈழை நோய் மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'சொ. ட்ரைலோபேட்டம்' (தூதுவளை) தாவரத்தின் இலைகளும், மலர்களும், 'பெர்ரி' கனிகளும் இருமலுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. 'வைத்தானியா சாம்னிஃபெரா' (அமுக்கிரா) தாவரத்தின் இலைகளும்,வேர்களும் நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தவும் பயன்படுகின்றன. மேலும், இது சத்துநீர்மமாகவும் பயன்படுகிறது. அலங்காரத் தாவரங்கள்'செசுட்ரம் டையூர்னம்' (பகல் மல்லி) என்ற இனமும், 'செ. நாக்டர்னம்' (இரவு மல்லி) என்ற இனமும், 'பெட்டுனியா அயிபிரிடா' (இளஞ்சிவப்பு மலர்) போன்ற தாவர இனங்கள், அலங்காரத்திற்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. புகையிலை.நிக்கோட்டியானநு டொபாக்கம்' (புகையிலை) தாவர இலைகளில் 'நிக்கோட்டின், நார்நிக்கோட்டின், அனபேசின்' போன்ற ஆல்கலாய்டுகள் உள்ளன. சிகரெட் பீடி, குழாய் உறிஞ்சி, உக்கா, மென்று சுவைக்கும் புகையிலை, மூக்குப் பொடி போன்ற புற்றுநோய் விளைவிக்கும் மனிதத் தயாரிப்புப் பயன்பாடுகளிலும், 'நிக்கோட்டின்' முதன்மையானதாக பயன்படுத்தப்படுகிறது. இது நரம்புகளுக்கு அமைதியூட்டும் மருந்தாகவும், தசை வலி வேதனைகளுக்கு மருந்தாகவும், பூச்சிக் கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.
|
Portal di Ensiklopedia Dunia