பேச்சு:குமரிக்கண்டம்
கற்பனைக் கண்டம்?Lemuria is a myth. There is no scientific evidence to show that such a continent existed. This being the case, I don't think this article presents clearly that this is a myth/hypothetical land mass. --Madhu 15:45, 16 மார்ச் 2007 (UTC) ஆம். இக்கருத்து தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.--Sivakumar \பேச்சு 15:52, 16 மார்ச் 2007 (UTC) இக்கட்டுரையில் நூற்குறிப்புகளில் உள்ளன எனவே கூறியுள்ளேன் தவிர அவை அப்படி இருந்திருக்கலாம் எனக் கூறவில்லை. ஆனாலும் உணமையாக இருந்திருக்கலாம். இராமாயணத்தினை வைத்து ராமரையும். இராவணனையும் எந்த அளவிற்கு நம்ப முடியுமோ அதே அளவிற்கு இப்பண்டைத் தமிழ் இலக்கியங்களை நம்பலாம் என நினைக்கின்றேன். மேலும் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் தமிழனின் நாடகம்,இலக்கணம் போன்ற பல தகவல்கள் உள்ளன. இவற்றினையும் போல் இக்குமரிக்கண்டத் தகவல் இருந்திருக்கலாம் அதனால் அது myth ஆக இருக்க முடியாது என நினைக்கின்றேன். ஆனாலும் இக்கட்டுரையில் காப்பியங்களில் கூறப்பட்டுள்ளன எனவே குறித்துள்ளேன். தவறுகள் இருந்தால் திருத்தவும்.--நிரோஜன் சக்திவேல் 16:06, 16 மார்ச் 2007 (UTC) மேலும் இத்தகவல்களைக் கூறும் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் வெறும் கற்பனையென்றால் இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் கூட வெறும் myth ஆகவே இருத்தல் வேண்டும் ஆனால் இன்று தமிழ் myth அல்ல.--நிரோஜன் சக்திவேல் 16:08, 16 மார்ச் 2007 (UTC)
நான் எழுதியது உங்களுக்குப் புரியவில்லை போலும். ஆங்கில ஆராய்ச்சியாளர்களின் குமரிக்கண்டத்தினைத் தான் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் லெமூர் இனம் இருந்த காரணத்தினால் லெமூரியா என அழைத்தனர். மேலும், அவ்வாறு இவர்கள் அழைத்த இலெமூரியாக் கண்டம் என்பது தமிழ் இலக்கிய நூல்களில் தகவல்களின் உதவியுடன் எனக் கருதுகின்றேன்.இரண்டும் ஒரே பகுதியிலேயே உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 17:15, 16 மார்ச் 2007 (UTC)
இதன்படி பாண்டியனுடைய நிலம் கடல் கொள்ளப்பட்டது என்றே உள்ளது. குமரிக் கண்டம் பற்றிய கதை இல்லை. சிலப்பதிகாரத்தில் பின்வரும் இரண்டு வரிகள் உள்ளன.
இங்கேயும் பஃறுளி ஆற்றையும், குமரி மலையையும் கடல் கொண்டதாகத் தான் உள்ளது. பிற்காலத்தில் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவற்றுக்கு உரை எழுதியவர்கள் இதனுடன் தங்கள் கருத்துக்களையும் சேர்த்துப் பெருப்பித்துள்ளார்கள். எப்படிப் பார்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் கூறும் கடல் கொண்ட தென்னாடு மிகப்பெரிய நிலம் அல்ல. இதற்கும் 19 நூற்றாண்டில் கருதப்பட்ட லெமூரியாவுக்கும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் வேறுபாடு உண்டு. உங்கள் கட்டுரையில் இரண்டும் ஒன்று எனக் கருதப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய முரண்பாடு. Mayooranathan 18:25, 16 மார்ச் 2007 (UTC) இக்கட்டுரையின் நோக்கம் குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியத்தை யூக அடிப்படையில் நிருபிப்பதற்கே. இதற்கு நமது இதிகாசபுராணங்களும் ISIAC INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS வெளியிட்ட புத்தகங்களும் மிகவுமுதவி புரிவன -தென்காசி சுப்பிரமணியன் சடைச்சங்க ஆதாரங்கள்: 1. சடைச்சங்கத்தில் முருகன் புலவனென இலக்கியமும், முருகனின் காலம் முந்தைய கலியுகமென கந்தபுராணமும் குறுகிறது. ISIAC வெளியிட்ட வானியல் மூலம் வரலாறு காண்போம் என்ற புத்தகத்தில் யுகக்கணக்குகள் தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளன. அதன்படி யுகங்களின் காலம் கிருதம் (4864) வருடங்கள். திரேதம் (3648) வருடங்கள். துவம் (2432) வருடங்கள். கலி (1216) வருடங்கள். மொத்தம் (12160) வருடங்கள். அதன்படி முருகனின் கலியுகம் கி.மு.16475-15259 ஆகும். ISIACயின் “ancient India” புத்தகத்தில் முருகனின் காலம் கி.மு.16000-15000 என வரையறுக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெறும் கால ஒற்றுமை ஆதாரமாகும். 2. சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பக்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன. பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எரும்புகள் என இலக்கியம் கூறுகிறது. மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு. 3. முருகனின் வரலாற்றுப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம். இஃது ஒரு ஒப்பிலக்கண யூக ஆதாரமாகும். 4. குமரிக்கண்டத்தின் யூக வரைபடம் “GOOGLE IMAGES “ மற்றும் ISIACயின் “ANCIENT INDIA” புத்தகத்திலும் கிடைக்கின்றன. இடைச்சங்க ஆதாரங்கள்: 1. இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயனத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், ராமாயனத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது. 2. ராமாயனத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது. இது மிகப்பெறும் கால ஒற்றுமை ஆதாரமாகும். கடைச்சங்க ஆதாரங்கள் பல உள்ளதால் அவை இங்கு இல்லை. பொது ஆதாரங்கள்: 1. ISIACயின் “ANCIENT INDIA” புத்தகத்தில் இந்தியாவின் யூக வரைபடங்கள் கி.மு.30000, கி.மு.8000, கி.மு.4400, கி.மு.3100 மற்றும் கி.மு.2700 வரை கிடைக்கிறது. இதன் காலங்களும் சங்க இலக்கிய இதிகாசபுராணங்களில் கூறப்பட்டுள்ள காலங்களும் மிகவும் ஒத்து வருவதால் குமரிக்கண்டமும் சங்க வரலாறும் உண்மை என்பது தெளிவே. 2. சங்க ஆதாரங்கள் மற்ற மொழியிலுள்ள (சீன மற்றும் வட மொழி) நூல்களிலும் அதனதன் காலத்திற்கு ஒத்து வருவதால் சங்க வரலாற்றினை உண்மை என்றே கொள்ள வேண்டும். தொகுப்பாளர் சு.மு. ராஜா சுப்பிரமணியன், த\பெ சு.முத்தையா, 18, என்.ஜி.ஓ. காலனி, மேலகரம்-627818, தென்காசி தாலுகா. மின்னஞ்சல் : rajasbrmnn@yahoo.co.in கைபேசி எண் : 9659462137 பொய்யும் புரட்டும்குமரிக்ண்டம் இருந்ததற்கான எந்த விதமான அறிவியல் அடிப்படையுள்ள ஆதாரமும் கட்டுரையில் சுட்டப்படவில்லை. மாறாக, வெறும் கற்பனைக் கதையான இராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி அதனை அறிவியல் ஆதாரம் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. இராமாயணம் போன்ற கற்பனைகளோ அல்லது சமய நூல்களோ அறிவியல் அல்லது வரலாற்று ஆதாரங்களாகக் கொள்ளத் தக்கனவன்று. முறையான ஆதாரம் தராமல், "இது எளிய ஆதாரம், எவரும் புரிந்து கொள்ளத் தக்கது, கந்தபுராணம் கூறுகிறது..." போன்ற வார்த்தைகளைக் கொண்டு ஆதாரம் சமர்ப்பிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முருகன் என்னும் கதாபாத்திரம் வரலாற்றில் இருந்ததற்கான ஆதாராம் எதுவும் இல்லை. அது பார்ப்பன சமயம் இந்தியாவிற் புகுத்தப்பட்ட பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை. அதனையும் இங்கு கட்டுரையில் அறிவியல் ஆதாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே, சீன மொழி ஆதாரம் என்று கூறிப் பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது. முறையான சீனமொழி வசனங்களையும் நூல்களையும் தாருங்கள்.--பாஹிம் 23:58, 17 சூலை 2011 (UTC) இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாறுஇலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றின்படி, இலங்கைத் தீவானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரேயே இந்திய நிலத்தட்டிலிருந்து பிரிந்து விட்டது. இதுபற்றி, இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள் கட்டுரையில் பின்வருமாறு உள்ளது: "இலங்கையானது ஆசியாக் கண்டத்தின் பெருநிலப் பரப்பிலிருந்து மிக ஒடுங்கிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம் சார் தீவாகும்[3]. இலங்கை ஒரு காலத்தில் கோண்டுவானாவின் பகுதியாக இருந்து பின்னர் கிரீத்தேசியக் காலத்தில் அதிலிருந்து பிரிந்து வடக்காக நகர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிலிருந்து 55 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் இந்தியப் புவித்தட்டுடன் இணைந்து ஆசியாக் கண்டத்துடன் இணைந்தது. இதனாலேயே இலங்கையில் பல்வேறு புராதன கோண்டுவானா இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் இலங்கை மீண்டும் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிரிந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நிலவிய உலர் காலநிலை காரணமாக இலங்கையின் தென்மேற்கு மழைக்காடுகளுக்கும் இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள காடுகளுக்குமிடையில் வித்தியாசங்கள் உருவாகின[3]. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிரிந்த பின்னர் நிலத்தொடர்களால் இலங்கைத் தீவு இந்தியாவுடன் காலத்துக்குக் காலம் தொடர்பு பட்டிருந்த போதும், இலங்கையின் ஈரப்பதன் மிக்க காடுகளும் அவற்றின் உயிர்ப்பல்வகைமையும் சூழலியல் தொடர்பில் மிகவும் வேறுபட்டனவாகக் காணப்படுகின்றன." இது இவ்வாறிருக்க, மிகச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவும் இலங்கையும் குமரிக்கண்டமெனும் ஒரு கண்டத்தின் பகுதிகளாக இருந்ததாகக் கூறுவது எப்படி ஏற்புடையதாகும்? பின் மயோசீன் காலத்தில், அதாவது கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரேயே இலங்கை இந்திய நிலத் தட்டிலிருந்து பிரிந்ததற்கு ஆதாரமாக, தென்னிலங்கையில் வெலிகமை பட்டினம் உட்பட பல்வேறு கரையோரப் பகுதிகளிலும் நிலத்திற்குக் கீழே வெகு தூரம் வரையில் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகவும் பரவலாகவும் கிடைப்பதனைக் கூறலாம். இதனை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம். குமரிக்கண்டம் என்ற ஒன்று உண்மையிலேயே இருந்திருக்குமாயின் இவ்வாறு நிலத்துக்குக் கீழே பல கிலோமீற்றர் தொலைவிற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் எப்படிக் கிடைக்க முடியும்?--பாஹிம் 01:47, 18 சூலை 2011 (UTC) பாஹிம்,இராமாயண அறிவியல் ஆதாரமற்றதென்பது ஏற்புடையதே. "பாண்டியர்" என்னும் கட்டுரையில்ta.wikipedia "இராமாயனத்தில்" என்ற துனைத்தொகுப்பு வருகிறது. அதை போலிங்கு தரலாமா? (ஆதாரமென்று கூறாமல்) தென்காசி சுப்பிரமணியன் பாஹிம், மேலும் "இது எளிய ஆதாரம், எவரும் புரிந்து கொள்ளத் தக்கது" என்று நான் கூரிய பகுதி school atlas-ல் உள்ளதாலேயே. வேறெங்குமப்படிக் கூறவில்லை.தென்காசி சுப்பிரமணியன் தென்காசி சுப்பிரமணியன்! இராமாயணம், புராணங்கள், சங்க நூல்கள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் செய்திகளை குமரிக்கண்டம் பற்றிய இலக்கியப் பதிவுகள் என்று தலைப்பிட்டு நீங்கள் தாராளமாகத் தரலாம். அவ்வாறானவற்றுக்கு இலக்கிய ஆதாரங்களைச் சுட்டுவது நல்லது. எனினும், அறிவியல் அல்லது வரலாற்று ஆதாரம் கேட்க வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லை. மற்றப்படி, இப்படி உறுதியற்ற செய்திகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் கோரப்படுவது மிகப் பொதுவானதே. அவ்வாறே, நீங்கள் முன்னர் சுட்டிய ISIAC என்னும் அமைப்புக்கு எந்தவித அறிவியல் அங்கீகாரமும் இல்லையென்றே கருதுகிறேன். காரணம், அவர்கள் வெளியிட்டதாகக் கூறும் நூலில் இராமாயணம், கந்தபுராணம் போன்ற கற்பனைகளிலிருந்து அறிவியல் ஆதாரம் காட்டப்பட்டிருப்பதாக நீங்களே முன்னர் கூறியிருந்தீர்கள். நான் இங்கு ஆதாரம் கேட்டது உங்களைப் புண் படுத்தவோ உங்களது முயற்சியை மட்டுப்படுத்தவோ அன்று. மாறாக, நாமெல்லாம் வருத்தப்பட்டு உருவாக்கும் இந்தக் கலைக்களஞ்சியத்தின் உண்மைத் தன்மையைப் பேணுவதே என் நோக்கம். பாண்டியர் கட்டுரையிலும் சில இடங்களில் ஆதாரம் தேவை என்பதை இணைப்பதற்குக் காரணமும் அதுவே. அவ்வாறின்றேல், நாமே நமது முயற்சியை வீணடித்தோராக மாட்டோமா? விக்கிப்பீடியா என்பது எம் எதிர்காலச் சந்ததியினரும் நாமும் படித்துப் பயன் பெறுவதற்காகவன்றோ. எம்மிடையே பல கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். எனினும், நாம் இங்கு ஒரு பொது நோக்கில் இக்கலைக்களஞ்சியத்தை ஆக்குகிறோம். என் சொற்கள் உங்களுக்கு மனக் கிலேசத்தை ஏற்படுத்தியிருப்பின், அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்.--பாஹிம் 14:47, 18 சூலை 2011 (UTC) குமரிமன்னன்பாஹிம்,உங்கள சொற்கள் மனக் கிலேசத்தை தரவில்லை.நான் இக்கலைக்களஞ்சியத்தில் நுழைந்து மூநாட்களே ஆகியது. எப்பகுதியை எங்கினைப்பது என்றறிய நாளாகும். இனி இராமாயணம், புராணங்கள், சங்க நூல்கள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் செய்திகளை குமரிக்கண்டம் பற்றிய இலக்கியப் பதிவுகள் என்று தலைப்பிட்டுத்தருவேன்.மேலும் ancient india bookல் ஒரு செய்தி. அது "it is said that chinese labourers were employed by the pandyan king and when they went down the mines they appeared like a huge army of small ants. therefore, they were called pon thondi erumbukal. this is confirmed by ancient chinese chronicles" என்று வந்துள்ளதை வைத்தே எழுதினேன். அது எந்த பழங்கதை என்றறிய நாளாகும். மேலும் அந்நூல் தமிழே முதல் மொழி என்று கூறுவதால் அது ஆரியச்சார்பற்றது. மேலும் தமிழர்ச்சமுதாயம் என்னும் நூலில் முருகன் என்ற மன்னனுக்கு நடுகல் வழிபாடு நடத்தப்பட்டதாகவும் பிற்பாடு ஆரியர் வருகையால் ஆரியக்கடவுள் கார்த்திகேயனுடனினைக்கப்பட்டானென்கிறது. முருகன் என்ற மன்னனுக்கு நடுகல் வழிபாடு நடத்தப்பட்டதற்கு அந்நடுகல்லின் வரிவடிவமும் நூலில் இருக்கிறது. அதை வைத்தே எழுதினேன். இவை கட்டுரையில் இணைக்கக்கூடியதா?தென்காசி சுப்பிரமணியன் குறித்த நூலின் ஆசிரியர் பெயர், நூற் பெயர், வெளியீட்டாளர் பெயர், வெளியீட்டு ஆண்டு, இடம், பக்க எண் முதலானவற்றைத் தந்து, (குறித்த நூல்) ... எனக் குறிப்பிடுகிறது/கூறுகிறது என்று நீங்கள் அதனை இணைக்கலாம். மறுப்பேதுமில்லை. எனினும், சங்ககால அல்லது சங்ககாலத்துக்கு முந்திய எழுதப்பட்ட வரலாறுகள் தமிழில் இல்லையல்லவா? சங்ககால வரலாறே சங்க இலக்கியங்களிலிருந்துதான் பெறப்படுகிறது. அவ்வாறிருக்க, முருகன் எனும் வேந்தன் ஒருவன் இருந்தானெனக் கூறும்போது அதற்குரிய வரலாற்று ஆதாரமும் கட்டாயம் காட்டப்பட வேண்டும். வெறுமனே அப்படி ஒருவன் இருந்தானென அந்நூல் குறிப்பிடுவதாயின் அவ்வாறானவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.--பாஹிம் 00:56, 19 சூலை 2011 (UTC) புறவய நோக்குவணக்கம் தென்காசி சுப்பிரமணியன். குமரிக்கண்டம் என்பது இன்றுவரை ஒரு தொன்மவியல் கருப்பொருளாகவே இருந்துவருகிறது. நிலவியல் சார்ந்து ஆதாரங்கள் அங்கு வாழ்ந்த மக்கள், மொழி, வரலாறு பற்றி எந்த தகவலையும் தரவில்லை. எனவே நாம் மிகவும் புறவய அடிப்படையிலேயே தகவல்களைச் சேர்ப்பது பொருத்தமானது. குறிப்பாக ஊகங்கள் மிகுந்த கூற்றுக்களை மிகவும் அவதானத்தோடு பயன்படுத்த வேண்டும். இராமாயணம் என்பது ஒரு தொன்மம். தற்கால நாவல்கள் போலவே சில கூறுகள் நிசமாக இருக்கலாம், ஆனால் இராமாயணத்தையோ அல்லது அது நடந்தாக கூறப்படும் கால கட்டத்தையோ யதார்த்தாமக் கொள்தல் அறிவியல் சார் முறையன்று. உங்கள் ஆதாரங்களை, நிலவியல், கடலியல், இலக்கிய என்று வகுத்து தகுந்த ஆதராங்களை மேற்கோள்களாக காட்டுதல் நன்று. மேலும் குமரிக்கண்டம் நோக்கிய விமர்சனங்களை சேர்த்தல் வேண்டும். --Natkeeran 00:27, 20 சூலை 2011 (UTC) Natkeeran, புறவய நோக்கு, தொன்மம் என்றாலென்ன?தென்காசி சுப்பிரமணியன் Natkeeran, குமரிக்கண்டம் கடல் கொண்ட தென்னாடு கட்டுரையின் பகுதியை சேர்த்துள்ளேன் செம்மைப்படுத்த வேண்டுகிறேன்?தென்காசி சுப்பிரமணியன்
--Natkeeran 23:03, 21 சூலை 2011 (UTC) natkeeran, what is the perfect tamil word for chronicles?தென்காசி சுப்பிரமணியன் //உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன்// புராணம் என்று சொல்லுதல் பிழையானது. இலக்கியத் தரவுகள் என்று குறிப்பிடலாம். புராணங்கள் என்பவை கடவுளர் குறித்து எழுப்பப்பட்ட கட்டுக் கதைகள். தமிழரின் இலக்கியச் சான்றுகளை புராணம் என்று புறங்கையால் தள்ளுதல் கூடாது. ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வணக்கம்தங்கள் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் பன்னெடுங்காலம் ஆய்வுகள் செய்து குமரிக்கண்டம் என்பதை நிறுவுகிறார். அதில் பல்வேறு வரலாற்று ஆதாரங்களை அவர் சுட்டுகிறார். அமிழ்தம் பதிப்பகத்தார் வெளியீடான ந.சி.க. நூல் திரட்டு வரிசையில் 'தமிழகம்' என்னும் நூலை வாசிக்கவும். கிடைக்குமிடம் தமிழ்மண் பதிப்பகம். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை-600 017 தொ.பேசி. 55183162. --Parvathisri 13:13, 13 திசம்பர் 2011 (UTC) நன்றி அம்மா. அவர் எழுதிய மற்ற சில புத்தகங்களிலும் இதை கண்டதுண்டு. நீங்கள் கூறிய புத்தகத்தலைப்பை நான் நூலகங்களில் கண்டதாக நினைவு. தமிழகம் என்ற தலைப்பை பார்த்துவிட்டு தமிழக வரலாறு என்று விட்டுவிட்டேன். இனி அதை முழுவதுமாக படித்து விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 14:42, 13 திசம்பர் 2011 (UTC) உடைந்த நிலத்தட்டா குமரி கண்டம்?கூகுள் எர்த்தில் தற்போதைய குமரிமுனைக்கு தெற்கே கடலின் ஆழம் 10 அடிகளில் கீழே நிலத்தட்டு இருப்பதை போல் காட்டுகிறது. இதுவே தெற்கே செல்ல செல்ல அது ஆழம் அதிகரிக்கிறது. என்றாலும் அதிகபட்சமாக 700 அடிகள்தான். அனால் 120௦ கிலோமீட்டர்வரை தெற்கில் சென்றால் அதுவரை 750அடிக்குள் காட்டும கடற்படுகை திடீரென் கடலின் ஆழத்தை 7000 அடியாக கட்டுகிறது. இதைவைத்து பார்க்கும்பொது ஒருவேளை இந்த இடம் மூழ்கிப்போன லேமுரியாவாக இருக்குமோ...!?! -- எஸ்ஸார் (after all, i'm not "in" on this game. but I just cant stop imagine this)
இலங்கை புவியியல் மீளுருவாக்கம்
//குமரிக்கண்டம் என்ற ஒன்று உண்மையிலேயே இருந்திருக்குமாயின் இவ்வாறு நிலத்துக்குக் கீழே பல கிலோமீற்றர் தொலைவிற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் எப்படிக் கிடைக்க முடியும்?// ஒருவேளை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கடல் வாழ் உயிரினங்களின் போது இப்பகுதியில் கடலிருந்தும் குமரிக்கண்ட காலத்தில் அங்கு நிலமும் இருந்திருக்கலாம். ஆதாரம்: தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94 அப்பத்தகத்தில் சோம. இரமசாமி என்பவர் செய்த ஆராய்ச்சிகள் என்று கூறப்பட்டுளது. --தென்காசி சுப்பிரமணியன் 07:58, 29 திசம்பர் 2011 (UTC) பொதுக்காலம்
நீங்கள் கூறியபடியே அப்பத்தகம் ஆதாரத்தை தரவில்லை. அப்புத்தகத்தில் அவ்வாய்வை பற்றிய சில குறிப்புகளே உள்ளதால் அதில்தெளிவில்லை. அக்குறிப்புகள் மொத்தமாக கிடைத்தால் படிக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள பொ.கா.மு. 570 ஆம் எனபது எந்தாண்டு. மகாவம்சம் ஆறாம் நூற்றாண்டு எழுதப்பட்டதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் 13:14, 29 திசம்பர் 2011 (UTC) பொ.கா. (பொதுக் காலம்) என்பது சிலர் கி.பி. (கிறித்துவுக்குப் பின்) என்று பயன்படுத்துவதற்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறே பொ.கா.மு. (பொதுக் காலத்துக்கு முன்) எனப்படுவது (கிறித்துவுக்கு முன்) என்பதற்கு மாற்றீடாகும். இவ்வாறு பயன்படுத்தப்படுவதற்குக் காரணம் கிறித்து என்ற பதத்தை நாம் ஏற்றுக்கொள்வதில்லை என்பதும் கிறிஸ்துவின் காலம் என்று கிறிஸ்தவர்களே குறிக்கும் காலத்தில் உள்ள குளறுபடியும் ஆகும். அதாவது, ஈசா (இயேசு) பிறந்த ஆண்டு கி.பி. 4 என்று குறிப்பிடப்படுகிறது. அப்படியாயின் கிறிஸ்து எனப்படுபவர் யார்? எவரது பிறப்பை வைத்துக் காலம் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதோ, அவர் பிறந்த காலத்திலிருந்து சரியான கணிப்பு நிகழவில்லை என்பதே இதிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில், இக்காலத்தில் மேற்படி அடிப்படையிலான நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது என்பதுடன் கிறித்தவரல்லாதோரும் அதனைப் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, கிறிஸ்து என்பவரில் நம்பிக்கை கொள்ளாத நாம் ஏன் அதனைக் கிறிஸ்தவர்களின் வழக்கத்தையொட்டிப் பயன்படுத்த வேண்டும்? அதனாற்றான், பொதுவான பயன்பாடு கருதி மேற்படி காலக் கணிப்பைப் பொதுக் காலம் (Common Era) என்று குறிப்பிடப்படுகிறது.--பாஹிம் 13:30, 29 திசம்பர் 2011 (UTC) மகாவம்சம்
பொ.கா.மு., makavamcam பற்றி தெரியப்படுத்தியதற்கு நன்றிகள். எனக்கு தெரிந்த மட்டும் கி.மு. 2400ல் [2] தமிழ்கம் இலங்கை கடைசியாக பிரிந்தது என்று ஒரு தொன்ம ஆய்வாளர் குறிப்பிட்டுளார். ஆனால் அவர் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் அல்ல. மேலும் இதைப்பற்றி தெரிந்து கொண்டு வருகிறேன். இப்பக்கத்தை உங்கள் கவனிப்பு பட்டியலில் வைத்திருக்க வேண்டுகிறேன்--தென்காசி சுப்பிரமணியன் 13:51, 29 திசம்பர் 2011 (UTC) சரி, அப்படியே செய்யலாம். எப்படியாயினும், நம்பகமான வரலாற்று ஏடுகளிலிருந்து அல்லது அறிவியல் ஏடுகளிலிருந்து உங்கள் கட்டுரைகளுக்கு வலுச் சேர்க்க முயன்றால் மிக்க நன்றாயிருக்கும். அப்போது, உங்களது கருத்துக்களுக்கு நியாயமான எதிர்ப்புக்கள் குறைவாக இருக்கும் என்பதுடன் ஏற்படும் கேள்விகளுக்கும் நீங்கள் தக்க முறையிற் பதிலளிக்க வசதியாக இருக்கும் அல்லவா?--பாஹிம் 14:01, 29 திசம்பர் 2011 (UTC) செயற்படாத தொடுப்புக்கள்இக்கட்டுரையிற் தரப்பட்டுள்ள http://www.urbandictionary.com/define.php?term=kumari%20kandam என்ற தொடுப்பில் அப்படி எதுவும் இல்லை என்ற பதில் வருகிறது.--பாஹிம் 08:12, 30 திசம்பர் 2011 (UTC)
இங்கே விக்சனரியில் சேர்க்குமாறு ஒரு உரையாடல் பதிவு செய்யப்பட்டுளது.[3] தகவலுலவன் அதைப்பார்க்கும் போது அவ்விணைப்பில் நான் கொடுத்த தகவல்களிருந்தன. தற்போது என்னானதென தெரியவில்லை. பாவாணர்தமிழ் வூ என்பது இணைய பல்கலைக்கழகம். நிரோஜ்ன் சக்திவேல் இக்கட்டுரையை எழுதும் பொது சேர்த்த தகவல் அது. நான் தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்களை சேர்த்து வைத்திருந்தென். அவ்விணைப்பும் தற்போது செயல் படவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் 09:15, 30 திசம்பர் 2011 (UTC) [4] பாவாணர் நூல்கள் இங்குளது.
இம்மூன்று நூல்கள்லுமே அவர் குமரிக்கண்டம் பற்றி எழுதியுள்ளார். அப்பாத்துரை என்பவரும் இவர் வாதங்களையே பின்பற்றியுள்ளாஅர்.--தென்காசி சுப்பிரமணியன் 09:30, 30 திசம்பர் 2011 (UTC) பாவாணர் கூற்றுகள் சில குமரியில் இருந்து தமிழன் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தான் என்று கூறுகின்றன். காப்புரிமை சிக்கல் கருதி அவற்றை மொத்தமக தராமல் சிறிதாக கொடுக்கப்பட்டது. 15 வாதங்கள் [5] [6]--தென்காசி சுப்பிரமணியன் 10:27, 30 திசம்பர் 2011 (UTC) மாறிய இணைப்புகள்அர்பன் ட்ச்னரி இங்கு மாற்றப்பட்டுளது.http://www.urbandictionary.com/define.php?term=Tamil&defid=1700246 அங்குள்ள வாக்கியம் Tamil is the oldest language in the world. It is the mother of all Indo European languages including Sanskrit. Recent archaeological (Adhichanalloor and Indian ocean) evidence shows that the language is related to sumerian and that Tamil was spoken in South India more than 5000 years ago. The language has changed very little over these years and old tamil is still comprehensible to tamil speakers. Tamil legend says speaks of a lost continent, "Kumari Kandam" which is believed to be submerged under Indian Ocean. Recent excavations in Indian Ocean seem to support this legend. a sumerian sentence: "gi ri a gi bad du ri a" old tamil sentence: "ka ri a ra va na da" --தென்காசி சுப்பிரமணியன் 09:39, 30 திசம்பர் 2011 (UTC) கூகுள் தேடலில் சில வெளியில் தெரிவது போல் உள் தெரிவதில்லை.http://www.google.co.in/#sclient=psy-ab&hl=en&site=&source=hp&q=urban+dictionary+sumeria+kumarikandam&oq=urban+dictionary+sumeria+kumarikandam&aq=f&aqi=&aql=&gs_sm=e&gs_upl=8510l22798l0l23517l37l31l0l0l0l0l0l0ll0l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=40f04f0c97159462&biw=1366&bih=624--தென்காசி சுப்பிரமணியன் 09:42, 30 திசம்பர் 2011 (UTC) பாவாணர்பாவாணர் குமரிக்கண்டத்திலிருந்து மக்கள் வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு 15க்கும் மேற்பட்ட சான்றுகளை மேலுள இணைப்புகளில் குறிப்பிடுளார். அதை இங்கு தந்தால் காப்புரிமை சிக்கல் வருமா?--தென்காசி சுப்பிரமணியன் 08:01, 22 பெப்ரவரி 2012 (UTC) மறுப்பு வாதங்கள்இக் கட்டுரையில் மறுப்பு வாதங்கள் விரிவாகச் சேர்க்கப்பட வேண்டும். பண்டைச் சமூகங்களுக்கு தொல்லியல், தொல்பொருள் ஆதாரங்களே கூடிய பலன் தருபவை. இலக்கிய ஆதாரங்களில் கால எல்லை கேள்விக்கு உட்படுத்தப்படுவதாலும், கற்பனைத் தன்மைகள் உள்ளதாலும் அவை போதிய சான்றுகளாக பல சூழ்நிலைகளில் அமைவதில்லை. --Natkeeran (பேச்சு) 03:21, 14 ஏப்ரல் 2012 (UTC) சில சான்றுகள்குமரிக்கண்டம் பற்றிய மறுப்பு வாதம் செய்வோர் ஒன்றை மட்டுமே முன் வைக்கின்றனர். அது அதற்கான அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை என்பதே. அதே சமயம் அதை மறுப்பதற்கான அறிவியல் ஆதாரமும் எதுவும் இல்லை. இங்கு ஆதாரமென்று எதுவும் இல்லை என்றாலும் சான்றுகள் என்று சிலவற்றை கூறிதான் ஆக வேண்டும். அவை,
மேற்ச்சொன்னவை அனைத்தும் பாவாணர் என்பவரால் குறிப்பிடப்பட்டவை. இன்னும் சிலவற்றையும் கூற விரும்புகிறேன். இவை யார் சொன்னது என்பது மறந்துவிட்டது.
Vaclav Blažek, Was there an Australian substratum in Dravidian? Mother Tongue XI, 2006. சுருக்கம் The matter of immigration from Africa via S. India to Indonesia and Australia (via Flores around 50,000 BCE) is complex: earliest skeletons from that period in Australia at Lake Mungo, some "Australian" genes have been detected in Tamil Nadu a few years ago, and apparently some "modern" (Homo Sap. sap.) Paleolithic tools in the same area go back some 74,000 years. More on all of this if you ask… இவை ஆலமரத்தடியில் கூறப்பட்டவை.
நான் கூற வருவது என்னவென்றால் ஏற்பு வாதங்கள் இருக்குமளவு மறுப்பு வாதங்கள் இல்லை என்பதே. இவை அனைத்தும் விஞ்ஞான ஆதாரங்கள் என்று கூறவரவில்லை. இவை அனைத்தும் தற்போதும் தாங்கள் வழக்கத்தில் காண்பவையே. எதிர்ப்பு வாதங்கள் கூறுபவர்கள் ஒன்றை மட்டூமே கூறுகின்றனர். அது இதற்கான விஞ்ஞான ஆதாரம் இல என்ன்பதே. இதை மறுப்பதற்கு விஞ்ஞான ஆதாரங்கள் ஏதுமிருந்தால் தரவும். மேலும் இதற்கான எதிர்ப்புக்கட்டுரைகளுக்கான இணைப்பையும் வெளியிணைப்புகளில் முதலிரண்டில் ஏற்கனவே இணைத்துளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:30, 14 ஏப்ரல் 2012 (UTC) சோம இராமசாமிமுன்பொருமுறை இந்திய இலங்கை புவிசரிதவியல் தொடர்பாக உரையாடல்கள் நிகழ்ந்தன. அந்த புத்தகத்தில் சோம இராமசாமி என்பவர் இந்தியாவும் லங்கையும் பிரிந்து சேர்ந்ததன் காலங்களை குறிப்பிட்டிருந்தார் என்றுளேன். அந்த இராமசாமி யாரென தற்போது ஒரு தகவல் கிடைத்தது. அவர் தான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர். அவர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலரில் பதிவாகியுள்ளது. அதிலுள்ள செய்திகள்,
சு. கி. ஜெயகரன்குமரிக்கண்டம் என்பது இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நிலவியல் அறிஞர் சு. கி. ஜெயகரன் 2007 ஆம் ஆண்டு ' குமரி நில நீட்சி ' எந்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ' காலச்சுவடு ' பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.அதில் குமரிக்கு தெற்கே சிறிய நிலப்பரப்பு இருந்திருக்கலாம் எனவும் அதையே குமரிக்கண்டம் அல்லது 'லெமுரியாக் கண்டம் ' எனத் தவறாக புரிந்துகொண்டோம் எனவும் பல்வேறு சான்றுகளின் மூலமும் அறிவியல் ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டும் முன்வைக்கிறார்.BALA.R,Sankaranputhoor. (பேச்சு)−முன்நிற்கும் கருத்து Balurbala (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. அதில் என்னென்ன ஆய்வுகளை முன் வைக்கிறார் என்று ஒரு பத்தியை நீங்களே கட்டுரையில் சேர்க்கலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:16, 29 சூலை 2012 (UTC) நிச்சயமாகச் செய்கிறேன். தற்போது சிங்கப்பூரில் இருக்கிறேன்.புத்தகம் இந்தியாவில் வீட்டில் இருக்கிறது. நவம்பரில் இந்தியா வரும்போது மேலதிக தகவல்களை இணைக்கிறேன். நன்றி.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) −முன்நிற்கும் கருத்து Balurbala (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. இதைப்பற்றிய மேலதிக விவரங்களைப் பதிய காலச்சுவடு பதிப்பகத்தின் அனுமதியைக் கேட்டிருந்தேன் , ஆனால் இதுவரை சாதகமான பதில் கிடக்கப்பெறாததால் மேலதிக விவரங்களைப் பதிவிட இயலவில்லை. BALA.R,Sankaranputhoor. (பேச்சு)
குமரி இடிபாடுகள்குமரி கண்டத்தில் தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் போன்றவை இருந்தது என்றால் அவற்றின் கட்டிட இடிபடுகள் இருந்ததற்கான அடையலங்களின் படங்களை சேர்க்கலாம். குமரி கண்டத்தில் ஆறுகள் ஓடியது என்றால் அவற்றின் படுகைகளை வரைபடத்தில் காட்டலாம் சதீஸ் (பேச்சு) 09:34, 16 ஏப்ரல் 2018 (UTC) |
Portal di Ensiklopedia Dunia