பேச்சு:சிங்களப் புத்தாண்டுதமிழ் சிங்களப் புத்தாண்டு??? இரண்டும் தொடங்கும் தேதி ஒன்று என்றாலும் தமிழ்ப் புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு என்று தனித்தனியாகச் சொல்வது தானே சரியாக இருக்கும்? சிங்கள ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு முறை அனைத்தும் தமிழ் முறையை ஒத்திருக்கிறதா?--ரவி 12:47, 14 ஏப்ரல் 2007 (UTC) அது தெரியாது, ஆனால் ஒரே நாளிலேயே அமையும். ஒன்றாக சொல்வதுதான் சிறப்பு. இலங்கையில் ஒரு மரபும் கூட. விரும்பினால் தமிழ் புத்தாண்டு என்று ஒரு புதுக்கட்டுரை வரையலாம். --Natkeeran 12:51, 14 ஏப்ரல் 2007 (UTC)
கனக்ஸின் கருத்துடன் உடன்படுகிறேன்--ரவி 13:20, 14 ஏப்ரல் 2007 (UTC)
சிங்களவர்களும் மருத்து நீர் வைப்பார்களா? கேள்விப்படவில்லை. சிங்களவர் வெள்ளை ஆடை அணிந்து புத்த கோயில்களுக்கு செல்வர். சிங்களவர் பின்பற்றும் முறையையும் தமிழர் பின்பற்றும் முறையையும் வேறு வேறாகக் குறிப்பிட வேண்டும். இக்கட்டுரையை அநுமதிப்பதானால் தலைப்பில் இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். அத்துடன் கட்டுரையில் இலங்கை என்று குறிப்பிடப்படவில்லை. இக்கட்டுரை இலங்கைக்கு மட்டுமே பொருந்தும். மலையாளிகளும் இதே நாளிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவும். அவர்களும் இதே முறையில் தான் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.--Kanags 13:47, 14 ஏப்ரல் 2007 (UTC) மருத்து நீர்? கை விசேடம்?கிரிபத்? சிங்களவர் எல்லாரும் பௌத்தர்களா? பௌத்தர்கள் அல்லாதோர் இதைக் கொண்டாடுகிறார்களா? எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைக் குறிக்க வேண்டும்--ரவி 14:18, 14 ஏப்ரல் 2007 (UTC) சிங்களவரில் 75% மேலானவர் பௌத்தர்கள் கூறப்படுகின்றது.மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாடும் முறை என முக்கியமாக விகாரை செல்வது, புதுபானையில் சமைப்பது, வீடுகளுக்கு செல்வது, எண்ணை தேய்த்து முழுகுவது,றபான அடிப்பது விளையாட்டுபோட்டி வைப்பது அவுருது குமாரி எனும் அழகி போட்டி பற்றியெல்லாம என சில காட்சிகள தொலைக்காட்சியில் பார்ததுண்டு --கலாநிதி 17:08, 14 ஏப்ரல் 2007 (UTC)
சில சொல் திருத்தங்கள்தீன் பண்டம் என்று கட்டுரையில் இருந்ததைத் தின்பண்டம் என்று மாற்றி இருக்கின்றேன். தின்னப் (உண்ணப்) பயன்படும் உணவுப்பொருள் தின்பண்டம். தின்பண்டம்வேறு தீன் பண்டம் என்பது வேறா ந்ன்றும் விளங்கவில்லை. நாற்களில் என்று இருந்ததை நாட்களில் என்ற்று மாற்றியுள்ளேன். வேறுப்பாடு --> வேறுபாடு.--செல்வா 20:44, 11 ஜனவரி 2009 (UTC) திருத்தங்களுக்கு நன்றி.--அருண் 21:48, 11 ஜனவரி 2009 (UTC) விளக்கம் தேவைஇக்கட்டுரையின் ஆரம்பப் பகுதியில் “விளக்கம் தேவை” என கேட்கப்பட்டிருந்தது. தற்போது போதிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகவே நினைக்கின்றேன். எனவே ஆரம்பப் பகுதியை திருத்திவிடும் படி கேட்டுக்கொள்கின்றேன். இந்துப் புத்தாண்டு எதிர் தமிழர் புத்தாண்டுசித்திரைப் புத்தாண்டு இந்துப் புத்தாண்டு என்று கூறுவதே தகும். தமிழர் புத்தாண்டு தை 1 என தமிழ்நாடு அரசு உத்யோகபூர்வமாக 2008 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது. --Natkeeran 21:44, 11 ஜனவரி 2009 (UTC)
அது எனக்கும் உடன்பாடானதே. ஆனால் இந்தக் கட்டுரையில் தமிழர் காலகாலமாக கொண்டாடி வந்தப் புத்தாண்டைப் பற்றியே பேசப்படுகின்றது. இதன் பிறகு எதனைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிப் பேசப்படவில்லை. தமிழர் புத்தாண்டுப் பிறப்பு தை மாதத்திலா? சித்திரை மாதத்திலா என்பது தமிழ் புத்தாண்டு கட்டுரையில் விவரிக்கலாம் என்றே நினைக்கின்றேன்.--அருண் 22:36, 11 ஜனவரி 2009 (UTC) தமிழரோடு ஒன்றிவிட்ட தமிழனது பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் வேறு படுத்த முனைவதால், நாளை “தமிழ் சிங்களப் புத்தாண்டு” எனக் கூறிவரும் சிங்களவனும் தமிழ் எனும் சொல்லை அகற்றிவிட்டு, அதற்கான ஒரு வரலாற்று கதையையும் உருவாக்கிவிட்டு, இது சிங்கள இனத்துக்கே உரிய சிங்களப் புத்தாண்டு எனக் கூறிக்கொள்ளப் போகின்றான். அதனை அரசு உத்யோகபூர்வமாக அறிவிப்பு மட்டுமன்றி சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டாலும் ஆச்சரியப் பட வேண்டியதில்லை. நாமோ 1921 இல் முடிவெடுத்து 2008 அறிவிக்கப்பட்ட “தை” தான் தமிழரது புத்தாண்டு எனக் கூறிக்கொள்ளப் போகின்றோம். --அருண் 22:54, 11 ஜனவரி 2009 (UTC) தமிழ் புத்தாண்டு என்று தை ஒன்றைக் குறிப்பிடுவதில் சில குழப்பங்கள் உண்டு. தமிழ்நாடு அரசு இட்ட ஆணை தமிழ்நாட்டு எல்லைக்கு உட்பட்டதே. இதை முழுமையான அனைத்துத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டனர் என்று சொல்ல இயலாது. அதே போல், தமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்கள், நாடுகளில் வாழும் தமிழர்களின் பழக்கத்தையும் இது மாற்றாது. இக்குழப்பங்களைக் கட்டுரையில் குறிப்பிட வேண்டும்--ரவி 17:30, 12 ஜனவரி 2009 (UTC)
//தமிழக அரசின் ஆணையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.// - இது விருப்ப நிலை. என்னுடைய தனிப்பட்ட ஆதரவும் தை ஒன்றைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொள்வது தான். ஆனால், அரசு கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தின் தற்கால நிலையைக் குறிப்பதாகவும் விக்கிப்பீடியா இருக்க வேண்டும். அரசின் கொள்கைகள் எல்லாமே சரியுமல்ல. தவறுமல்ல. அரசின் கொள்கைகளுக்கு உட்படாத எத்தனையோ சமூக வழக்கங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுக்க 100% மக்கள் தை ஒன்றை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடத் தொடங்கவில்லை என்பது உண்மை நிலை. இந்த இரட்டை நிலை, குழப்பத்தைக் கட்டுரையில் முக்கியமாக குறிப்பிட வேண்டும்--ரவி 04:50, 13 ஜனவரி 2009 (UTC) //தமிழக அரசின் ஆணையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.// தமிழக அரசின் நிலையை அனைத்து தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனில் முதலில் ஈழத்துக்கான கோரிக்கையை விட வேண்டும். ஏனினில் தமிழ்நாட்டில் சுதந்திர ஈழத்தைப் பற்றி பேசுவது இன்று குற்றமென்று கருதப்பட்டு பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அருகில் உள்ள தமிழர் பெரும்பான்மை மாநிலமான புதுச்சேரியே இன்னமும் தமிழ்ப்புத்தாண்டாக சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் போது, உலகத்தமிழர் தமிழக அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்பது சரியல்ல. எந்த மக்களும் தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் ஆணைகளையே மதிப்பர். தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள 90% தமிழர்களாலும் 10% பிற மொழியினராலும் தேர்ந்தெடுக்கபடுவது. இதில் ஈழத்தமிழருக்கோ, மலேசியத்தமிழருக்கோ, சிங்கப்பூர் தமிழருக்கோ, இங்கிலாந்து, தென்னாபிரிக்க, கனடிய, பர்மிய, பிரெஞ்சு, அமெரிக்க தமிழருக்கோ எந்த பங்கும் இல்லை. எனவே தமிழக அரசின் ஆணைகளை இவர்கள் எல்லோரும் மதிக்கவேண்டும் என்று எண்ணுவது சரியல்ல. |
Portal di Ensiklopedia Dunia