பேச்சு:நீச்சற் குளம்நீச்சற் குளம் நீச்சல்க் குளம் எது சரியானது? --கோபி 16:57, 21 மார்ச் 2007 (UTC) நீச்சல்க் குளம் என்பது கட்டாயம் தவறு. ஆனால் சிலர் நீச்சல் குளம் என்று பிரித்து எழுதுகிறார்கள். ஆனால், நீச்சலுக்கான குளம் என்றால் நீச்சற்குளம் என்றுதான் எழுத வேண்டும். பிரித்து எழுதும் பொழுது வல்லொற்றை நீக்கி எழுதினால் இன்று தவறாக பலர் எண்ணுவதில்லை. இதே போல பலருக்கும் குழப்பம் தருவது எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா, எழுத்துகள் என்று எழுத வேண்டுமா என்பது. கள் என்பது ஒரு தனிச் சொல் இல்லை, பன்மை குறிக்கும் பின்னொட்டு என்று கொள்வோர், எழுத்துகள் என்பர். உகரத்தில் முடிவதால் ககர ஒற்று (க்கன்னா) சேர்க்கவேண்டும் என்பர் சிலர். இன்று இந்த இரண்டு வழக்கும் ஏற்புடையது என்பது இலக்கணம் அறிந்தவர்களின் கருத்து. எனவே வாழ்த்துக்கள், வாழ்த்துகள், பாராட்டுகள், பாராட்டுக்கள் எல்லாமே சரியானது. அதே போல, நீச்சல் குளம் என பிரித்து எழுதினால் அதிகம் தவறாகத் தெரியாது. நீச்சற்குளம் அல்லது நீச்சற் குளம் என்பதுதான் சரியானவை. --செல்வா 17:15, 21 மார்ச் 2007 (UTC) விளக்கத்துக்கு நன்றி செல்வா. --கோபி 17:56, 21 மார்ச் 2007 (UTC)
நீச்சல் குளம் வழிமாற்றிப் பக்கமாக உள்ளது. நீச்சற்குளம், நீச்சல்க் குளம் போன்ற வழிமாற்றிப் பக்கங்களையும் உருவாக்குவது தேடுவதை இலகுவாக்கும். வழிமாற்றிகளை நாம் வேண்டிய அளவு பயன்படுத்தித் தேடுதலை இலகுவாக்குவோம். ஆ.வி.யிலும் வழிமாற்றிப் பயன்பாடு மிக அதிகம். கோபி 17:17, 22 மார்ச் 2007 (UTC)
ஆம், நீச்சல்க் குளத்தில் இருந்து வழிமாற்று தேவையில்லை. பெரும்பாலானோர் நீச்சல் குளம் என்று எழுதக்கூடும். நீச்சல்க் குளம் என்பது அரிதான பிழை என்று தான் நினைக்கிறேன்.--ரவி 17:50, 22 மார்ச் 2007 (UTC)
தலை கீழாக கால் மேலாக நீருக்குள் பாய்வதை எங்க ஊரில் சொருக்கல் அடிப்பது என்போம். நீருக்குள் உடலைச் சொருகுவது போல் பாய்வதால் இந்தப் பெயர் என நினைக்கிறேன். நீர்ச் சொருக்கல், நீர்ச்சொருகல் என்று சொல்லலாமே? மரபுச் சொற்களைப் பயன்படுத்துவது நன்று தானே?--ரவி 19:02, 22 மார்ச் 2007 (UTC) நல்ல அழகான கட்டுரை. படங்கள் மிகச்சிறப்பாக உள்ளன.--செல்வா 18:17, 22 மார்ச் 2007 (UTC)
இப்ப தான் மேல கவின் குதிப்பு சொல்லி இருந்ததை உற்றுப் பார்த்தேன். அதில் விவரிக்கப்பட்டுள்ளது எங்க ஊரில் பல்ட்டி :) தான். ஆனால், பல்ட்டி என்று விக்கிபீடியாவில் எழுத இயலாது. இது என்ன மொழிச் சொல் என்று தெரியவில்லை. நான் சொல்லுவது - பல்ட்டி இல்லாமல் ஒரே பாய்ச்சலாகத் தலையை முன்னே விட்டுக் குதிப்பது. ஆனால், பல்ட்டியின் இறுதி விளைவும் இதுவே என்பதாலும் சொருக்கல் என்பது வினைவழி வந்த பெயர்ச்சொல்லாக இருப்பதால் இதையே எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம். "சொருகுறேன்" என்று வினையாகச் சொல்வது இல்லை. சொருக்கல் அடித்தல் என்பார்கள். அடித்தல் என்பதை குதித்தல் போல் கருதிக் கொள்ளலாம். ஆனால், சொருகு என்ற வினையில் இருந்து தான் இது வந்திருக்கிறது என்பது தெளிவு. எனவே, நீச்சலைப் பொருத்தவரை சொருக்கல், சொருகு ஆகியச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால், பொதுவான diveஐ தமிழில் எப்படிச் சொல்வது? கரணம்? கரணம் தமிழ்ச் சொல்லா? பல்ட்டிக்குப் பதில் கரணம் என்றும் சொல்வது இப்ப நினைவுக்கு வருகிறது. கரணம் கூட ஒழுங்குடன் செய்யப்படும் கவின் மிகுந்த குதிப்பு தான். --ரவி 19:55, 22 மார்ச் 2007 (UTC)
Mayooranathan 09:00, 23 மார்ச் 2007 (UTC) நீச்சற்குளமா-நீச்சல்குளமா?நீச்சல், குளம் - என்ற இருசொற்கள் சேர்ந்து புணர்ச்சியில் நீச்சற்குளம் எனவே வரும். நீச்சல்குளம் என்பது சரியா என்றால் இதனை நீச்சல், குளம் அதாவது, நீச்சலும் குளமும் என உம்மைத்தொகையாகப் பொருள்செய்யவும் வாய்ப்புண்டு. (அதாவது நீச்சல் என்ற ஒன்று, குளம் என்ற வேறொன்று என இருபொருள்கள்,/ உம்மைத்தொகையில் ஒற்றுமிகாது என்பது இலக்கணம்.-கபிலபரணர்-) ஆனால் இங்கு நீச்சற்குளம் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும், வாழைப்பழம் என்பதுபோல; (இங்கு ஒரேபொருள்; வாழைவேறு பழம் வேறன்று.) -அதிகப்படியாக இலக்கணம் கூறுகின்றேனோ?- எனவே,பொருள்மயக்கம் நீங்க, லகரம் றகரமாகத்திரிந்து புணர்ந்தது தெளிவான விளக்கத்திற்காக.நீச்சல்குளம் என எழுதினால் பொருள்மயக்கம் நேர வாய்ப்புண்டு. இலக்கணம் என்பதுதான் என்ன? ஒருமொழியைப்பயன்படுத்தும் மக்கள் உருவாக்குவதுதான்; இலக்கணிகள் வேலை அதனை ஓர் ஒழுங்குபடுத்தி விதிகளை வகுப்பதுதே. கேட்கின்றவர்களுக்கு இதுஇருபொருள்களான நீச்சலும் குளமுமா (அல்லது) ஒரேபொருளான நீச்சற்குளமா என்றமயக்கத்தினை நீக்கவே நீச்சற்குளம் எனப் பயன்படுத்தினர் நம்முன்னோர்:பின்அதனை இலக்கணமாக ஆக்கினர். எனவே, பயனர் திரு.செல்வா அவர்கள் கூறியபடி 'நீச்சற்குளம்' என எழுதுவதுதான் தெளிவானது. 'நீச்சல்குளம் என எழுதுவது எளிமையாக உள்ளது: நீச்சற்குளம் என எழுதுவது கடினமாக உள்ளது' என்பார் பலர். அது ஒருகற்பனையே! அவ்வாறு கூறுபவர்கள் யாரும் 'சொல்கள்' என்றோ,'கல்கள்' என்றோ எழுதுவதில்லை:'சொற்கள்' 'கற்கள்' என்றே எழுதுவர். எனவே,புணர்ச்சியைக் கற்றுக்கொள்ள முதலில் நமக்கு விருப்பம் இருக்கவேண்டும். சுமையாக எண்ணக்கூடாது.மேலும்,சொல்லிக்கொடுக்க ஆர்வம்மிக்க ஆசிரியர்கள் அமைவதும் முக்கியம், அதனால்தான், அன்றே "தாரமும் குருவும் அவனவன் தலையெழுத்து" என்றுநம் தமிழ் முன்னோர் சொல்லிச்சென்றனர்.--Meykandan 02:45, 7 பெப்ரவரி 2010 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia