போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் (Bose–Einstein condensate) என்பது 1924 ஆம் ஆண்டில் இந்திய இயற்பியலாளரான சத்தியேந்திர நாத் போசு மற்றும் ஐன்ஸ்டைன் ஆகியோரால் முன்னுரைக்கப்பட்ட போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம் என்ற குவாண்டம் விளைவினால் உருவாக்கப்படும் ஒரு நிலை. திண்மம், திரவம், வளிமம் மற்றும் பிளாஸ்மா ஆகிய பொருள்களின் நான்கு நிலைகளுக்கு அடுத்து ஐந்தாவது நிலையாகக் கருதப்படுகிறது இந்த போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள். நோபல் பரிசு1995-இல் முதன் முதலில் இந்த போசு செறிபொருளை உருவாக்கியதற்காக கார்னெல், வெய்மேன், கெட்டர்லே ஆகிய இயற்பியலாளர்களுக்கு நோபல் பரிசு 2001-இல் வழங்கப்பட்டது. போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம்போசு செறிபொருளில் உள்ள அணுக்களின் டீ பிராய் (de Broglie) அலைநீளமானது சராசரி அணுவிடைத்தொலைவிற்கு சமமாக இருப்பதால் அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அடிநிலையை அடைகின்றன. எனவே அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அலைச்சார்புகளைப் பெறுகின்றன. இதுவே போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம் ஆகும். போசு செறிபொருளின் பயன்பாடுகள்
|
Portal di Ensiklopedia Dunia