போர்ட் இந்தியா நிறுவனம்
![]() ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ford India Private Limited) இந்தியாவில் போர்ட் தானுந்து நிறுவனத்திற்கு முழுமையும் உரிமையான துணை நிறுவனமாகும். இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் சீருந்து தயாரிப்பாளர்களில் ஆறாவதாக உள்ளது. வரலாறு1996ஆம் ஆண்டு புதிய ஃபோர்ட் இந்தியா பி.லிமிடெட்டின் உற்பத்தி துவங்கினாலும் இதன் ஆரம்பம் 1907ஆம் ஆண்டு போர்ட் மாடல் ஏ உடன் தொடங்கியது. தற்போதைய தொழிற்சாலை சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ளது. 1926ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சி 1954ஆம் ஆண்டு மூடப்பட்டது. மீண்டும் மகிந்தரா நிறுவனத்துடன் 50-50 இணைந்த முயற்சியாக மகிந்தரா போர்ட் இந்தியா லிமிடெட் (MFIL) என அக்டோபர் 1995 அன்று தொடங்கியது. போர்ட் தானுந்து நிறுவனம் தனது பங்கை 72% ஆக மார்ச் 1998இல் உயர்த்தி ஃபோர்ட் இந்தியா பி. லிட் என மறுபெயரிட்டது.[1] நிறுவன ஆளுமைஃபோர்ட் இந்தியாவின் மேலாண்மையை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக மைக்கேல் போன்ஹம், செயல் இயக்குநர் (இயக்கம்) சந்தீப் சன்யால், செயல் இயக்குநர் (சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவை) நிகெல் ஈ. வார்க், துணைத் தலைவர் (நிதி) மற்றும் முழுநேர இயக்குநராக குல்ஜித் ராணா, துணைத் தலைவர் (மனிதவளம்) வைரமணி பாண்டியன் ஆகியோர் நிர்வகிக்கின்றனர். தயாரிப்பு வசதிகள்சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள மறைமலை நகரில் ஆண்டுக்கு 100,000 அலகுகள் தயாரிக்கக்கூடிய போர்ட் இந்தியாவின் முதன்மை தொழிற்சாலை அமைந்துள்ளது. மார்ச் 2010இல் இதன் புதிய இரக வண்டி போர்ட் ஃபிகோவை அறிமுகப்படுத்துகையில் [2] இந்தத் திறனளவை 200,000 அலகுகளாக இரட்டிப்பாக்க போர்ட் தானுந்து நிறுவனம் $500 மில்லியன் செலவழித்துள்ளது. இதனை ஆண்டுக்கு 250,000 அலகுகளாக உயர்த்த புதிய தொழிலக வசதிகளையும் அமைத்து வருகிறது.[3][4] இரகங்கள்தற்போது
நிறுத்தப்பட்டது
விற்பனை மற்றும் சேவை பிணையம்ஏப்ரல் 2011 நிலவரப்படி, போர்டு இந்தியாவிற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மூன்று நடுவண் ஆட்சிப்பகுதிகளிலும் உள்ள 107 நகரங்களில் 170 முகமைகள் செயல்பட்டு வருகின்றன. விற்பனை செயல்திறன்2010 ஆண்டில், போர்ட் இந்தியா தனது 2009ஆம் ஆண்டின் விற்பனையான 29,488 சீருந்துகளுக்கெதிர் 83,887 சீருந்துகளை விற்று 172% வளர்ச்சியைக் கண்டுள்ளது.[5] ஏற்றுமதிபோர்டின் இந்தியத் தொழிற்சாலையிலிருந்து குறைந்தளவு சீருந்துகள் தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிறது.[6] இந்தியாவின் உற்பத்தி நிறுத்தம்2021 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் இருந்து ஃபோர்டு வெளியேறிய நிலையில், தனது குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்தது.[7] மீண்டும் இந்தியா வரும் ஃபோர்டு2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் மீண்டும் இந்திய சந்தைக்கு T6 வகை மற்றும் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவும், தயாரிக்கவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.[8] இதனையும் காண்கவெளியிணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia