மங்கைபாகர், தேனம்மை கோயில், பிரான்மலைமங்கைபாகர், தேனம்மை, வடுகபைரவர் கோயில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி வட்டாரத்தில் உள்ள பிரான்மலையில் அமைந்துள்ளது. இது 2000 ஆண்டு பழமை வாய்ந்த மூன்றடுக்கு ஆலயம் என்ற சிறப்பு பெற்றது.[1] சுமார் 2500 அடி உயரமுள்ள இம்மலையின் அடிடிவாரத்தில் தான் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மங்கைபாகர், தேனம்மை, பைரவர் கோயில் அமைந்துள்ளது.[சான்று தேவை] முல்லைக்குத் தேரீந்த கடையேழு வள்ளல்களில் முதலாவது தலைவர் மன்னன் பாரி. அவர் ஆண்ட இயற்கை எழில் கொஞ்சும் பறம்பு மலை. பாரியின் கோட்டையான பறம்பு மலை எனும் பிரான்மலைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. சங்க இலக்கியத்தில் பறம்பு மலை எனும் பிரான்மலை அடிவாரம் குன்றக்குடி ஆதின நிர்வாகத்தில் உள்ளது. பாதாளம், பூமி, கைலாயம் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இக்கோயிலில் சிவன் மூன்று நிலைகளில் காட்சிதருகிறார். இக்கோயிலின்
இக்கோயிலில் மூன்று தலை, மூன்று கால், மூன்று கைகளுடன் கூடிய ஸ்வரலிங்கேஸ்வரரும் உள்ளார். சிவனும் பார்வதியும் அம்மை, அப்பராக அடிவாரத்தில் வீற்றிருக்கின்றனர். மலை உச்சியில் விநாயகர், முருகன் கோயில்கள் உள்ளன. மலைப்பாதையில் ஆங்காங்கே அருள்மிகு குளங்கள், கிராம தேவதைகளின் கோயில்கள் உள்ளன. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் இரவு நேரத்தில் பூதம், யானை, ரிஷபம், நந்தீசர், கிளி, கேடயம், வாகனங்கள் பஞ்சமூர்த்தி சுவாமி ஆகிய வாகனங்களில் சாமி நான்கு ரத வீதிகளில் உலாவரும்.[2] மேலும் காண்கபிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia